வலிகாமம் வடக்கு பகுதியில் பொது மக்களுடைய காணிகளை விடுவிக்காத அரசாங்கம்: எழுந்துள்ள குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடங்கள் ஆகியும் வலிகாமம் வடக்கு பகுதியில் பொது மக்களுடைய காணிகளை இதுவரை விடுதலை செய்யவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் பிராஜா அபிலாஷா வலையமைப்பின் வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் ,இதனை தெரிவித்துள்ளார்.

வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடங்கள் ஆகியும் வலிகாமம் வடக்கு பகுதியில் பொது மக்களுடைய காணிகளை இதுவரை விடுதலை செய்யவில்லை.மாறாக கடந்த காலத்தில் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் முன்வைத்த காணிகளே விடுதலை செய்யப்பட்டுள்ளது.

இந்த அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் பொதுமக்களுடைய காணிகள் பொதுமக்களுக்கு மீளவும் வழங்கப்படும் என தற்போதுள்ள ஜனாதிபதி பிரச்சார காலத்தின் போது தெரிவித்திருந்தார்.

குறிப்பாக இந்த அரசாங்கம் காணிகளை விடுவிப்பதாக கூறிக்கொண்டு 764 இலக்க பேருந்து வழித்தடத்தினை முற்றாகத் திறந்து விட்டு காணிகளை விடுவித்ததாக சர்வதேசத்திற்கு காட்டிக்கொள்கின்றது.

மக்களும் குறித்த பலாலி வீதியால் சென்று வருவதால் அவர்களுக்கும் ஏனைய காணிகள் தொடர்பில் அக்கறை இருக்கவில்லை.

மக்களுடைய காணிகள் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வளையப்பகுதியில் இருப்பதால் காணி உரிமையாளர்கள் அயல் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் தொடர்ந்தும் 35 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.

மக்கள் தொடர்ந்து காணிகளுக்காக போராடி வருகின்றனர். எனவே இந்த அரசாங்கம் மக்களுடைய காணிகளை விடுவித்து தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

அத்துடன் பலாலியில் இராணுவத்தின் மருத்துவ முகாம் அமைந்துள்ள காணியில் கைவிடப்பட்டிருந்த கட்டுமான வேலைகள் தற்பொழுது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காணிகள் விடுவிக்கப்படமாட்டாதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் தற்பொழுது எழுந்துள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வின் போது இந்த விடயம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்த பொழுதும் உயர் பாதுகாப்பு வளையத்தில் அந்த கட்டட பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

அத்துடன் மயிலிட்டி பகுதியில் கடல் மார்க்கமாக போதைப்பொருள்களை கடத்துவதை தடுக்கும் முகமாக றாடர் அமைப்பதற்காக காணி சுவீகரிக்கும் நடவடிக்கையில் கடற்படை ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மக்களுடைய காலில் இவ்வாறு றாடர் அமைப்பதற்கு நாங்கள் ஒருபொழுதும் அனுமதிக்கபோவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்