வன்னி பகுதியில் இருந்து தேக்குமரக் குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிவந்த லொறி ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்
புத்தூர் சந்தி பகுதியில் இருந்து குறித்த லொறியை பின்தொடர்ந்து சென்று மீசாலை பகுதியில் உள்ள மரக்காலை ஒன்றில் மரக்குற்றிகளை இறக்க தயாரான போது, அதன் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்
இதன்போது 20 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான 52 தேக்குமரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த லொறி இந்தக் குற்றத்திற்காக நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சாவகச்சேரி பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.