இரணைமடுக்குளத்தின் வான்கதவு திறந்து விடப்பட்ட நிலையில் கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சி செல்லும் பிரதான வீதி வெள்ள நீர் குறுக்கறுத்து பாய்ந்தமையால் குறித்த வீதி சேதமடைந்துள்ளது. இதனால் வட்டக்கச்சியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தற்காலிக போக்குவரத்தை மேற்கொள்ளும் நடவடிக்கையில் வீதி அபிவிருத்தி திணைக்களம் ஈடுபட்டுள்ளது.