வடக்கில் ஜேவிபியின் தேவைக்காக கல்வியை சீரழிக்க விடமாட்டோம்..

நாடு தளவிய போராட்டத்தை மேற்கொள்வோம்.. பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை.

ஜேவிபி என்கின்ற தேசிய மக்கள் சக்தியினால் வடக்கு கல்வியில் இடம்பெறும்  முறைகேடுகள் தன்னிச்சையான செயற்பாடுகளால் வடக்கு கல்வி சீரழிய விடமாட்டோம் எனத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எமது ஆசிரியை மற்றும் அதிபர்களின் பலத்தை விரைவில் காட்டுவோம் என எச்சரிக்கை விடுத்தார்.

வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற போராட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கு கல்வியை ஆட்சியில் உள்ள ஜேவிபி என்கின்ற தேசிய மக்கள் சக்தியின் தொழில் சங்கத்துக்கு  ஏற்ற வகையில் செயல்படுத்த நினைப்பதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

வடக்கில் இடம் பெற்ற ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடுகள் பாரபட்சம் இடம்பெற்றமை ஆதாரங்களுடன் வெளிவந்துள்ள நிலையில் கடந்த திங்கட்கிழமை வட மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் நீதி கேட்டு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.

மூன்று நாட்கள் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க முடியாமல் வடமாகாண ஆளுநர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளரும் ஒழித்துத் திரிகின்றனர்.

நான் வடக்கில் பல ஆளுநர்களை கண்டிருக்கிறேன் அவர்களுடன் பல்வேறு சந்திப்புக்களை செய்திருக்கிறேன் ஆனால் தற்போதைய ஆளுநரை  சந்திக்க முடியாமல் உள்ளது.

 ஜே வி பி என் கை பொம்மையாக செயற்படும் தற்போதைய வடமாகாண ஆளுநர் எமது கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை தெரிந்து எம்மை சந்தித்தால் ஜே வி பி என் நிகழ்ச்சி நிரல் தெரிந்துவிடும் என்பதற்காகவே ஒழிக்கிறார்.

மூன்று நாட்களாக பாடசாலைக்கு செல்லாது போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை சந்திக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் உள்ள ஆளுநர் எவ்வாறு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பார்.

ஊழல்களை ஒழிக்கப் போகிறோம் என ஆட்சிக்கு வந்த ஜேவிபி என்கின்ற தேசிய மக்கள் சக்தி வடக்கு கல்வியை முடக்கும் வகையிலும் அதிபர் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை செவிமடுக்காமல் செயற்படுவதும் சர்வாதிகார ஆட்சியை கொண்டு செல்வதாகவே பார்க்கிறோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயவை விரட்டியடிப்பதற்கு அதிபர் ஆசிரியர்களின் போராட்டமே ஆரம்ப புள்ளி என்பதை இந்த அரசாங்கம் நன்கு அறியும்.

இடமாற்றத்தின் போது எமது ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை உதாசீனம் செய்துவிட்டு நீங்கள் நினைத்தது போல வடக்கு கல்வியை நடத்தலாம் என நினைத்து விடக்கூடாது.

 ஆகவே எமது  போராட்டத்தை  வாக்குறுதிகளின் அடிப்படையில்  முடிவுறுத்துகிறோம்  ஆனால் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படாத விடுமானால் நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டங்களுக்கு அழைப்பு விடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்