வடக்கின் சுற்றுலாத் துறை மேம்பாட்டுக்கு புதிய திட்டம்

வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் தயாரிக்கப்பட்ட “2026 – 2030 வடக்கு சுற்றுலா அபிவிருத்தி மூலோபாயத் திட்டம்” நேற்று(06.02.2026) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போதே, திட்ட அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டதோடு, அத்திட்டம் தொடர்பான விரிவான முன்னளிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், வவுனியாப் பல்கலைக்கழக வியாபாரக் கற்கைகள் பீடத்திடம் இந்த திட்டத்தைத் தயாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, வை.நந்தகோபன் தலைமையிலான விசேட நிபுணர் குழுவினரால் இந்தத் தந்திரோபாயத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகள் மற்றும் கலந்துரையாடல்களின் அடிப்படையில் மொத்தம் 431 சுற்றுலா மையங்கள் இந்த திட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

ழ்ப்பாண மாவட்டம்: 5 வலயங்களாகப் பிரிக்கப்பட்டு 200 மையங்கள்.
முல்லைத்தீவு மாவட்டம்: 77 மையங்கள்.
கிளிநொச்சி மாவட்டம்: 56 மையங்கள்.
வவுனியா மாவட்டம்: 49 மையங்கள்.
மன்னார் மாவட்டம்: 49 மையங்கள்.
இவற்றில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னுரிமை அடிப்படையில் தலா 10 சுற்றுலா மையங்களும், மாகாண மட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் தலா 2 சுற்றுலா மையங்களுமாக மொத்தம் 10 மையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு சுற்றுலா மையமும் தெரிவு செய்யப்பட்டதற்கான காரணம், அங்குள்ள சுற்றுலா வாய்ப்புகள், அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், வடக்கின் சுற்றுலாவில் உள்ள பலம் மற்றும் பலவீனங்கள், பலவீனங்களை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் என அனைத்துத் தரவுகளும் இந்த மூலோபாயத் திட்ட நூலில் விரிவாக உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இந்த திட்ட அறிக்கையைப் பெற்றுக்கொண்டு கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

இந்தச் சிறந்த திட்டத்தை வெறும் ஆவணமாக மட்டும் வைத்திருக்காது, இதனைச் செயற்படுத்துவதற்கான நடைமுறைச் சாத்தியமான பொறிமுறையை உடனடியாக உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், முன்னுரிமைப்படுத்தப்பட்ட ஒவ்வொரு சுற்றுலா மையத்தையும் சுற்றுலாப் பணியக அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட அனைத்துப் பங்குதாரர்களுடனும் கலந்துரையாடி, அபிவிருத்திப் பணிகளை விரைவாக ஆரம்பிக்குமாறும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிகழ்வில், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், மன்னார் மாவட்டச் செயலர், பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்), உதவிப் பிரதம செயலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளர், 5 மாவட்டச் செயலகங்களின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், பணிப்பாளர் மற்றும் உறுப்பினர்கள், திட்டத்தைத் தயாரித்த வவுனியாப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்