மொன்றியல் நகரின் லாச்சீன் (Lachine) புறநகர்ப் பகுதியில், வெள்ளிக்கிழமை இரவு காவல்துறையினரின் தலையீட்டின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 21 வயது இளைஞன் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார் என மொன்றியல் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்த அந்த 21 வயது இளைஞர், தியோடோர் தெருவில் உள்ள குடியிருப்பில் அத்துமீறி நுழைந்த சந்தேக நபர்களில் ஒருவர் ஆவார்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில், மெர்சியர்-ஓச்லாகா—மெசோன்னேவ் (Mercier-Hochelaga—Maisonneuve) பகுதியில் உள்ள தியோடோர் தெருவில் உள்ள ஒரு குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் காவல்துறைக்கு அழைப்பு வந்துள்ளது.
குறைந்தது மூன்று சந்தேக நபர்கள் குடியிருப்பிற்குள் நுழைந்தபோது, அங்கிருந்த இரண்டு குடியிருப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மோதலின் போது, உடலில் சுடப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சந்தேகநபரே, தற்போது உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.