ரி20 அணிக்கு உப தலைவராக தசுன் ஷானக்க

பாகிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர், அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் ஆகியவற்றுக்கான இரண்டு இலங்கை கிரிக்கெட் குழாம்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டது.

அணித் தலைவர் சரித் அசலன்க உட்பட 11 வீரர்கள் இந்த இரண்டு குழாம்களிலும் பெயரிடப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இலங்கையின் ரி20 கிரிக்கெட் அணிக்கு முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க உப தலைவராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் பானுக்க ராஜபக்ஷவுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கான சுற்றுப் பயணத்தில் முதலில் பாகிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை விளையாடும்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டிகளும் ராவல்பிண்டியில் நவம்பர் 11, 13, 15ஆம் திகதிகளில் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான், ஸிம்பாப்பே ஆகிய அணிகளுடன் மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை விளையாடும்.

இந்த இரண்டு வகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் தொடர்களுக்கான இலங்கை குழாம்களில் சரித் அசலன்க, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், காமில் மிஷார, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துஷ்மன்த சமீர, அசித்த பெர்னாண்டோ, ஏஷான் மாலிங்க ஆகிய 11 பேர் இடம்பெறுகின்றனர்.

அவர்களுடன் லஹிரு உதார, சதீர சமரவிக்ரம, பவன் ரத்நாயக்க, ஜெவ்றி வெண்டர்சே, ப்ரமோத் மதுஷான் ஆகியோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் குழாத்திலும் குசல் பெரேரா, தசுன் ஷானக்க, பானுக்க ராஜபக்ஷ, துஷான் ஹேமன்த, நுவன் துஷார ஆகியோர் சர்வதேச ரி20 குழாத்திலும் இடம்பெறுகின்றனர்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் ஏற்கனவே பெயரிடப்பட்டிருந்த டில்ஷான் மதுஷன்க முழங்காலில் ஏற்பட்ட உபாதையிலிருந்து மீளாததால் அவருக்குப் பதிலாக ஏஷான் மாலிங்க இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

ஏஷான் மாலிங்க சரவ்தேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள போதிலும் சர்வதேச ரி20 போட்டிகளில் அவருக்கு இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதேபோன்று சர்வதேச ரி20 கிரிக்கெட் குழாத்தில் ஏற்கனவே இணைத்துக்கொள்ளப்பட்டிருந்த மதீஷ பத்திரண உபாதையிலிருந்து மீளாததால் அவருக்குப் பதிலாக அசித்த பெர்னாண்டோ இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

முதலிரண்டு ரி20 போட்டிகள் ராவல்பிண்டியில் நவம்பர் 17, 19ஆம் திகதிகளில் நடைபெறும். இறுதிப் போட்டி உட்பட மற்றைய போட்டிகள் லாகூரில் நடைபெறும்.

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்