ராஜபக்ஷ குமாரர்களை குறித்து குற்றங்களைச் சாட்டியவர்களுடன் அநுர அரசு இணைந்து இரகசியமாகச் செயற்படுகின்றது? – சம்பிக்க ரணவக்க

கடந்த காலங்களில் ராஜபக்ச குமாரர்களின் நெருங்கிய உறவினர்களுக்குச் சொந்தமானவை என தற்போதைய அநுர அரசாங்கத்தினால் விமர்சிக்கப்பட்ட அதே நிறுவனங்களுடனேயே இன்றும் நிலக்கரி கொள்வனவுக்கான இரகசிய ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டளி நிறுவனங்களிடமே சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்;

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நிலக்கரி இறக்குமதியில் ஈடுபட்ட பிளாக் சேண்ட் எனும் நிறுவனமே தற்போது பொடென்ஷியா எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. முன்னைய ஆட்சியாளர்களின் பிள்ளைகளுக்குச் சொந்தமான ஊழல் நிறைந்த நிறுவனம் என விமர்சித்த இதே பொடென்ஷியா நிறுவனத்திடமே தற்போதைய அரசாங்கம் 15 நிலக்கரி கப்பல்களைக் கொள்வனவு செய்துள்ளது.

அமைச்சர் ரஷ்யாவிற்குச் சென்று அந்த நிறுவனத்தின் தாய் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் வந்த 5 கப்பல்களில் 3 கப்பல்கள் இரத்து செய்யப்பட்டு 2 மாத்திரமே எடுக்கப்பட்டன. இதில் என்ன ஒப்பந்தம் நடந்தது என்பது எமக்குத் தெரியாது. ஆனால் இது திட்டமிட்ட ஊழல் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்தக் கொள்வனவு முறைகேடுகளால் இலங்கை மின்சார சபைக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. 8 ஆவது கப்பல் வரை ஏற்பட்ட நட்டம் 7.67 பில்லியன் ரூபாவாகும். தற்போது வந்துள்ள 9 ஆவது கப்பலினால் மாத்திரம் சுமார் ஒரு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கப்பலிலிருந்தும் சராசரியாக 90 கோடி ரூபா நட்டம் ஏற்படுகிறது. உலகச் சந்தையில் நிலக்கரி விலை ஒரு மெட்ரிக் தொன் 400 டொலரிலிருந்து 80 டொலர் வரை குறைந்திருந்தாலும் அதன் பயனை மக்களுக்கு வழங்காமல் இலாபத்தை விநியோகஸ்தர்களுக்கே அரசாங்கம் தாரை வார்த்துள்ளது.

பழைய திருடர்களைப் பிடிப்போம் எனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான இந்த அரசாங்கம் இன்று அதே குமாரர்களின் நிறுவனங்களிடமே நிலக்கரியைப் பெறுகிறது. இந்தியாவிஸில் பணமோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரின் நிறுவனத்திடமே இறுதியாக நிலக்கரி வாங்கப்பட்டுள்ளது.

2010 மற்றும் 2015 காலப்பகுதியில் நான் அமைச்சராக இருந்தபோது மின்சார சபையை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றிக் காட்டினேன். 2012 இல் தரம் குறைந்த நிலக்கரியைக் கொண்டுவந்த 5 கப்பல்களுக்கான கொடுப்பனவை நான் நிராகரித்ததுடன் நிலக்கரி நிறுவனத் தலைவரை 24 மணித்தியாலங்களுக்குள் பதவியிலிருந்து நீக்கினேன். அத்தகைய உறுதியான தலைமைத்துவம் இந்த அரசாங்கத்திடம் இல்லை.

மத்திய சுற்றாடல் அதிகார சபையோ அல்லது வடமேல் மாகாண சுற்றாடல் அதிகார சபையோ இந்த நிலக்கரியால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டுகொள்வதில்லை. இந்த நட்டத்தை ஏப்ரல் முதலாம் திகதி முதல் மின்சாரக் கட்டண உயர்வு ஊடாக மக்கள் மீது சுமத்த அரசாங்கம் முயன்றால் நாட்டின் 75 இலட்சம் மின் நுகர்வோரையும் திரட்டி நாம் வீதியில் இறங்குவோம் என்றார்.

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்

zelen

மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

March 4, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு

kumara

அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது

March 4, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக

Andreas

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மாகாணசபைத்தேர்தல்கள் குறித்து இன்று அரசிடம் பேசுவதாக நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

March 4, 2026

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார்