ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று திங்கட்கிழமை(10) சந்தித்தார். இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான தற்போதைய மக்கள் பரிமாற்றங்கள் மற்றும் கலாச்சார உறவுகள் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்களை இரு தலைவர்களும் விவாதித்தனர்.