மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (13) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கொள்ளுப்பிட்டி – உத்தராகன்த பகுதியில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு கொம்பனிவீதி ரயில் நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் ஆவார்.
இது தொடர்பில் ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.