ரணிலுடன் பணியாற்றுவது இலகுவாக இருந்தது – முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி!

இலங்கையில் இருந்த ஜனாதிபதிகளில் எவருடனும் தனக்கு எந்த பிரச்சினைகளும் இருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதாரம் பற்றி அறிந்தவர் என்பதால் அவருடன் பணியாற்றுவது இலகுவாக இருந்தது என்று தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

நாட்டின் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்க்காணலில் இதுபற்று மேலும் கூறியிருந்த அவர், “இதன் போது தனது திருமண அனுபவம் பற்றி அவர் சுவாரஸ்யமாக கருத்து பகிர்ந்து கொண்ட போது , மூன்று வருட காலத்தில் தனது காதலியை பல்கலைக்கழகத்தில் அவர் கவனமாக பார்த்து கொண்டதாகவும், அதன் பலனாக 55 வருடங்களாக அவரது மனைவி அவரை பார்த்துக்கொள்கிறார் என்று கனிவாக பேசினார். இதனை பொருளாதார வார்த்தைகளில் கூறுவதாயின் மூன்று வருட முதலீடு ஐம்பத்ததைவருடங்களாக எனக்கு பயனளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

இருவரும் ஆங்கில மொழிப் பேசிக் கொண்டதால் மொழிப் பிரச்சினை ஒன்று வரவில்லை என்றும். தனது குடும்பத்தில் அனைவரும் பொதுச் சேவையில் ஈடுபட்டவர் என்று கூறினார். சிறு வயதிலிருந்து மத்திய வங்கியிலிருந்து தனக்கு ஆர்வம் இருந்தது என்றும் கூறினார்.

அதேபோல் இலங்கையில் முதல் நிதி அமைச்சரான ரொனி டி மெல் அவர்களோடு பழகிய காலம் வாழ்வில் நல்ல அனுபவங்களை தந்தது என்றும் அதற்காக அவருக்கு தான் நன்றி கூறுவதாகவும் இதன் போது கூறினார்.

1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் போது இலங்கை முந்திய நாடாக ஜப்பான் மட்டுமே இருந்தது. ஆசியாவில் இல ங்கை இடம் இரண்டாவதாகவும் வலுவாகவும் இருந்தது. 1966களில் சிங்கப்பூரை விடவும் இலங் கையின் மொத்த தேசிய உற்பத்தி அதிகமாக இருந்தது. இன்றைய பின்னடைவுக்கு இலங்கையில் சற்று விலை அதிகரித்தாலும் மக்களின் சடுதியான எதிர்ப்பு கிளம்வுதே காரணமாகும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

அதேபோல் தன்னிடம் இருக்கின்ற பணத்திற்கு உட்பட்டதாகவே தனது செலவுகள் இருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

1980 களிலிருந்து பொருளியல் ஆலோசகராக பணியாற்றிய அனுபவத்தில் எந்த ஜனாதிபதியுடனும் தனக்கு முரண்பாடுகள் இருக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதேபோல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனேயே நேரடியாக பணியாற்றும் வாய்ப்பு தனக்கு கிடைத்திருந்தது என்றும் அவர் பொருளாதாரம் பற்றி நன்கு அறிந்தவர். அவருடன் பணியாற்றுவது மிக இலகுவானது.

மறுமுனையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாராநாயக்க குமாரதுங்கவின் அரசியல் நிலைப்பாடுகள் தனது அரசியல் நிலைப்பாடுகளுடன் சற்று ஒத்துப்போவதாக அமைந்தது என்றும், அவர்களுக்கும் நல்ல இடம் கிடைத்திருக்க வேண்டும் என்றும் இலங்கையில் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாக அவர்களால் ஆட்சியை கொண்டு நடத்துவது சற்று சிரமமானதாக அமைந்திருந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும்,இலங்கையில் காணப்பட்ட முரண்பாட்டு நிலைமைகள் காரணமாக 1983 களில் இலங்கைக்கு வரவிருந்த பல பில்லியன் முதலீடுகள் இழக்கப்பட்டது” என்றும் தெரிவித்தார்.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு