யாழ் மாவட்ட நிதி ஒதுக்கீடு: சந்தேகங்களை அரசு தீர்க்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இயற்கை அனர்த்த பாதிப்புகளின் போது அந்த பாதிப்புகளை குறைப்பதுவே அரசாங்கத்தின் பொறுப்பாகும். பல வாரங்களுக்கு முன்னரே பாதிப்பு வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும், ஏன் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அரசாங்கம் ஆராய வேண்டும். முன்னெச்சரிக்கை நடடிக்கைகளை முன்னெடுத்திருந்தால் உயிரிழப்புகளை குறைத்திருக்கலாம்.

இதேவேளை இந்த அனர்த்தத்தில் வடக்கு மாகாணத்தில் பாதிப்பு ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருந்தாலும் கிளிநொச்சி, வவுனியா, மன்னாரில் அதிகமாக இருந்தது. இந்த அனர்த்தங்கள் நடந்துகொண்டிருந்த போது இந்த அரசாங்கம் நடந்துகொண்ட விதம் தொடர்பில் பல விமர்சனங்கள் இருக்கின்றன. யாழில் மிகக்குறைவான பாதிப்புகள் இருந்த இடத்திலேயே முன்னுரிமை வழங்கப்பட்டு கூட்டங்கள் நடந்தன.

வடக்கு மற்றும் ஏனைய மாகாணங்களில் இந்தக் கூட்டங்கள் நடக்கவில்லை. ஒருங்கிணைக்கப்பட்ட வேலைத்திட்டத்தை நடத்துவதற்கு வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் அரசாங்கம் விரும்பவில்லை.

யாழ்ப்பாணத்தில் 14, 459 வீடுகள் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக 361 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் நாங்கள் ஆழமாக யோசித்தால் நெடுந்தீவில் 2024ஆம் ஆண்டில் 893 வீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இருக்கின்றது. ஆனால் 1216 வீடுகள் அங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது.

அந்த வகையில் 30 மில்லியன் 4இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சில முரண்பாடுகள். இந்த நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படக்கூடாது என்று கூறவில்லை. அவர்களுக்கு கிடைக்க வேண்டும். ஆனால் இதில் ஊழல் நடக்கக்கூடாது. இதனால் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். இது தொடர்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

இதனால் சகல பிரதேசங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும். தேசிய மக்கள் சக்தியினர் தலையிட்டு இந்த விபரங்கள் தவறாக நிரப்பப்பட காரணமாக இருந்துள்ளதாகவும், இதில் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்கின்றோம்.

இதேவேளை வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்பில் வாக்கெடுப்பை கோரும், பாதுகாப்புக்கான நிதி மற்றும் வடக்கு மற்றும் கிழக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதி பற்றாக்குறை ஆகிய காரணங்களால் இந்த வாக்கெடுப்பை கோருவோம் என்றார்.

sanakkiyan

நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் பொறிமுறை வேண்டும் – சாணக்கியன்

December 6, 2025

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க

irsd

சீரற்ற வானிலை; வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்குக் கால அவகாசம்

December 6, 2025

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான

kajen

யாழ் மாவட்ட நிதி ஒதுக்கீடு: சந்தேகங்களை அரசு தீர்க்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

December 6, 2025

இயற்கை அனர்த்த பாதிப்புகளின் போது அந்த பாதிப்புகளை குறைப்பதுவே அரசாங்கத்தின் பொறுப்பாகும். பல வாரங்களுக்கு முன்னரே பாதிப்பு வரும் என்று

mora

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிக்கின்றது!

December 6, 2025

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது மிக அதிகமாக இருப்பதாகவும், அதன் சேமிப்புக் கொள்ளளவில் 97.87 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் பொலன்னறுவையில் உள்ள

glob

நாட்டைக் கட்டியெழுப்ப ஒற்றுமையுடன் கைகோருங்கள் – அனைத்துலகத் தமிழர் பேரவை

December 6, 2025

பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு, உலகத் தமிழர் சமூகத்தின் ஒருங்கிணைந்த மனிதாபிமான உதவிகள் இன்றியமையாதவையாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலகத் தமிழர் பேரவை, உலகம்

iya

அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு – சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் – காவிந்த ஜயவர்தன

December 6, 2025

இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த

Harini-Amarasuriya

பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை!

December 6, 2025

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த வயதெல்லை உள்ளிட்ட விடயங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அரச

tha

மண்சரிவால் தாயை பிரிந்த 3 மாத குழந்தை

December 6, 2025

மீமுரேவில் ஏற்பட்ட மண்சரிவினால் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட 3 மாத குழந்தையை இராணுவத்தினர் தாயாரிடம் ஒப்படைத்தனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(5)

bam

பம்பலப்பிட்டியில் விபத்து : 5 பேர் காயம்

December 6, 2025

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

mal

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் மாலைதீவினால் நன்கொடை

December 6, 2025

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாலைதீவினால்

ifj_1

அவசரகாலச்சட்ட ம் தொடர்பான பிரதியமைச்சர் கருத்துக்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவை கண்டனம்!

December 6, 2025

ஜனாதிபதியை விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலச்சட்ட விதிகள் பிரயோகிக்கப்படும் என்ற பிரதியமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்து தொடர்பில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும்

photo-collage.png (2)

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின்: பால்நிலை அடிப்படையிலான வன்முறை பற்றிய விழிப்புணர்வு

December 6, 2025

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) அதன் பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து 16 நாட்கள் செயற்பாட்டு திட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில்