யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற செயற்பாடுகள் முழுமைபெறாமலிருப்பது கவலையளிக்கின்றது என வீடமைப்பு நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் எச். எம். சுசில் ரணசிங்ஹ தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற செயற்பாடுகள் முழுமைபெறாமலிருப்பது கவலையளிப்பதாகவும், ஜனாதிபதி இவ்விடயத்தில் கவனமெடுக்குமாறு தன்னை தனிப்பட்ட ரீதியாக அறிவுறுத்தியுள்ளார் .
மேலும், இவ்வாண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மீள்குடியேற்ற செயற்பாடுகள், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் சென்ற ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முழுமைப்படுத்தாத வீடுகள் தொடர்பாகவும் கவனமெடுக்கப்படும் எனவும், இக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தேவைப்பாடுகள் தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
0
யாழில் நீண்டகாலமாக சட்டவிரோத மணல் அகழ்வு – இருவர் கைது!
21 Nov, 2025 | 05:43 PM
image
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று, தாளையடி பகுதியில் நீண்டகாலமாக சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுவந்த இருவர் வியாழக்கிழமை (20) மருதங்கேணி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மணலுடன் டிப்பர் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அந்த டிப்பரை பயன்படுத்தி பல ஆண்டுகளாக இரவு பகலாக மணல் கடத்தல் இடம்பெற்று வந்த நிலையில் மருதங்கேணி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி அத்துக்கல தலைமையில் குறித்த பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டபோது இந்த கைது நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர்.
கைப்பற்றப்பட்ட டிப்பரையும், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதற்கு மருதங்கேணி பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.