யாருடன் கூட்டணி? டிடிவி, ஓபிஎஸ் பதில்!

அமமுக – பாஜக கூட்டணி குறித்து தமிழக அரசியல் வட்டாரங்களில் தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது. என்டிஏ அல்லது தவெக என்ற இரண்டு வாய்ப்புகள் முன் டிடிவி தினகரன், ஓபிஎஸ் நிற்கும் நிலையில், கூட்டணி அரசியல் சூடு பிடித்துள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (AMMK) என்பது தமிழ்நாட்டில் 2018 ஆம் ஆண்டில் டிடிவி தினகரன் தலைமையில் தொடங்கப்பட்டது. அதிமுகவில் இருந்த அவர் அங்கு ஏற்பட்ட கருத்து மோதலின் காரணமாக அமமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு அமமுக செயல்பட்டு வருகிறது. 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களில் அமமுக போட்டியிட்டு, தன்னுடைய அரசியல் அடையாளத்தை நிலைநிறுத்த முயன்றது.

அமமுக கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் என்ற பேச்சுக்கள் அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. டி.டி.வி.தினகரனை கூட்டணியில் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி கீரின் சிக்னல் காட்டியதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

அதேநேரத்தில், தவெக உடனும் அமமுக பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அண்மையில், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் டிடிவியுடன் பேசி வருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23 ஆம் தேதி என்டிஏ கூட்டணி சார்பில், கூட்டணி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மேடையில் டிடிவி ஏறுவாரா? இந்த கேள்வி தான் தமிழக அரசியலில் அடுத்த சில தினங்களுக்கு விவாதிக்கப்படக் கூடிய விவாத பொருளாக உருவெடுத்துள்ளது.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த