மேற்கு வங்கத்தில் 32,000 ஆசிரிய நியமனங்கள் ரத்து செல்லாது!

மேற்கு வங்கத்தில், 32,000 துவக்கப் பள்ளி ஆசிரியர்களின் நியமனங்களை ரத்து செய்து, கொல்கட்டா உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, இரு நீதிபதிகள் அமர்வு நிறுத்தி வைத்துள்ளது. இதனால், வேலை இழக்கும் அபாயத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தப்பினர்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. கடந்த 2014ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வை தொடர்ந்து, துவக்க பள்ளி ஆசிரியர்களாக, 45,000 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த நியமன நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த, 2023ல் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய, 32,000 ஆசிரியர்கள் நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டார். அத்துடன், மூன்று மாதங்களுக்குள் புதிதாக ஆசிரியர் நியமன நடவடிக்கைகளை துவங்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினார்.

இந்த உத்தரவை எதிர்த்து மம்தா பானர்ஜி அரசு தரப்பில் தாக்கல் செய்த சீராய்வு மனுவை, நீதிபதி சோமன் சென் தலைமையிலான டிவிஷன் அமர்வு விசாரித்தது. ஒரு கட்டத்தில் தனிப்பட்ட காரணங்களால் இவ்வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.

அதன் பின், உச்ச நீதிமன்றத்தை மேற்கு வங்க அரசு அணுகிய நிலையில், கொல்கட்டா உயர் நீதிமன்ற அமர்வின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் இறுதி விசாரணைக்காக வழக்கை மீண்டும் கொல்கட்டா உயர் நீதிமன்றத்திற்கே அனுப்பி வைத்தது.

இந்த முறை நீதிபதிகள் தபாபிரதா சக்ரவர்த்தி மற்றும் ரீத்தோபிரோடோ குமார் மித்ரா அடங்கிய அமர்வு இறுதி விசாரணை நடத்தி, ஒரு நீதிபதி அமர்வின் உத்தரவை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தது. இதனால், வேலை இழக்கும் அபாயத்தில் இருந்த 32,000 துவக்க பள்ளி ஆசிரியர்கள் தப்பினர். கொல்கட்டா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசு வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

Anusa

யாழ். இளைஞர் அனுசன் சர்வதேச ரீதியில் வெற்றியாளராக தெரிவு

December 6, 2025

இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அனுசன் சிவராசா, உலகளாவிய இளைஞர் மாற்றத்தலைவர்களை பாராட்டும் QS ImpACT Awards 2025 – Plant

fa

அறவழியில் போராட்டம்; தையிட்டி விகாரையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் கிட்டவில்லை – அருட்தந்தை சத்திவேல்

December 6, 2025

தையிட்டி விகாரை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் இதுவரை கிட்டவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை

anu

அனர்த்த மரண எண்ணிக்கை தொடர்பாகப் பொய்த் தகவல் கூறிய எம்.பிக்கு எதிராக வழக்கு

December 6, 2025

நாடாளுமன்றத்தை தவிர்த்து வெளியில் போலியான பிரசாரம் முன்வைக்கப்பட்டிருந்தால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் என்று ஜனாதிபதி அநுர

co

கொலன்னாவ பகுதியில் பாரிய நெருக்கடி…

December 6, 2025

மெகொட கொலன்னாவ பகுதியில் வெள்ளம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட

de

கரவெட்டியில் டெங்கு பரவும் சூழல்; 09 பேருக்கு அபராதம்

December 6, 2025

யாழ்ப்பாணம் – கரவெட்டி பகுதியில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய 09 ஆதன உரிமையாளர்களுக்கு 72 ஆயிரம்

jaffna muni

யாழ்.மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்

December 6, 2025

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று(5) 2 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

Thurai rat

வெள்ள அனர்த்தத்தைத் தடுப்பதற்கான திட்டம்

December 6, 2025

அனர்த்தம் தொடர்பாக ஜனாதிபதியின் செயற்பாட்டிற்கு பாராட்டு, மட்டக்களப்பில் வெள்ளம் தடுப்பதற்கான திட்டத்துக்கு 10,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என

rohan

சஜித் கட்சியின் வெலிகம அமைப்பாளர் பதவி விலகினார்!

December 6, 2025

ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம அமைப்பாளரும், வெலிகம நகரசபை முன்னாள் தலைவரும் ரெஹான் ஜயவிக்ரம அந்த கட்சியிலிருந்து விலகியுள்ளார். கட்சியின்

maha

பெருக்கெடுத்தது மகாவலி கங்கை…

December 6, 2025

வரலாறு காணாத வகையில், மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக ஏற்பட்ட அதிவேக வெள்ள நீரோட்டம், கிண்ணியா பிரதேசத்தில் பாரிய அழிவுகளை

Saji

வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்புச் செய்த வேளை தூங்கிக் கொண்டிருந்த அரசாங்கம் இப்போது அவர்களை குற்றம் சாட்டி வருகிறது!

December 5, 2025

நாட்டில் ஏற்பட்ட சூறாவளி புயல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று சிலர் இப்போது குற்றம் சாட்டி

sridharans

தமிழ் மொழி புறக்கணிப்பு?

December 5, 2025

தமிழும், சிங்களமும் அரசகரும மொழியாக இருக்கின்ற போதும், அனர்த்த முகாமைத்துவ குழுவின் முன்னெச்சரிக்கை அறிவித்தல்கள் சிங்களத்திலும் மற்றும் ஆங்கிலத்திலும் மட்டுமே

Death-2

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்; பெண் பலி

December 5, 2025

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கசகல மற்றும் பெடிகம சந்திப்புக்கு இடையில் 160 கி.மீ தூரத்தில் கார் ஒன்று தீப்பிடித்ததில் ஒரு