முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் 60 வரையான காணி உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்து காணி உரிமையாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று (27) முன்னெடுத்தனர்.

புதுக்குடியிருப்பு, கோம்பாவில் கிராமசேவையாளர் பிரிவு மற்றும் தேவிபுரம், அ., ஆ.பகுதி மக்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் காணிப்பகுதி உத்தியோகத்தர்கள் கிராம அலுவலர் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த நடவடிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

இதன்போது இது தொடர்பான மகஜரினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரனிடம், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடமும் கையளித்துள்ளார்கள்.

இந்த மக்கள் அரசாங்கத்தினால் அரை ஏக்கர் காணி கொடுத்தார்கள். அதற்குள் வீடும் தென்னப்பிள்ளையும் வைக்க காணி முடிந்துள்ளது. இந்த நிலையில் எங்களின் வாழ்வாதரத்திற்காக எங்கள் காணியுடன் அல்லது அருகில் உள்ள மந்துக்காடாக கிடந்த காணிகளை சீர்செய்து துப்பரவு செய்து எங்கள் வாழ்வாதாரத்தினை கொண்டு செல்வதற்காக சீர்செய்து பயிர் கொடிகளை நாட்டிவைத்துள்ளோம் வான்பயிர் செய்துள்ளோம் மரமுந்திரிகை செய்துள்ளோம்.

இந்நிலையில் இந்த காணிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு பிரதேச செயலகத்தினால் அ. படிவம் ஒட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் எம்மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் சிலர் 15 ஏக்கர் வரையில் காணியினை பிடித்து ஆவணம் போட்டுள்ளார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஏழை மக்களை கருத்தில் எடுக்கவில்லை இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருடன் கதைத்துள்ளோம். காணி ஆணையாளரிடம் கதைத்துள்ளோம். இந்த அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் கொடுத்துள்ளோம் ஜனாதிபதி செயலத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம் இதுவரையும் எந்த பதிலும் இல்லை.

இந்த நிலையில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த காணிப்பிரச்சினை தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ.விஜயகுமார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

புதுக்குடியிருப்பு பிரதேசசெயலத்திற்கு உட்பட்ட கோம்பாவில் தேவிபுரம்,சுதந்திரபுரம் போன்ற மூன்று கிராமசேவையாளர் பிரிவுகளில் மிக அதிகமாக அரச காடுகளை வெட்டி காணிகளை அடத்தாக பிடிக்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

போர்காலத்திற்கு முதல் அல்லது கடந்தகாலத்தில் கொடுக்கப்பட்ட அரசாங்கத்தினால் சட்டரீதியாக கொடுக்கப்பட்ட காணிகளோ அல்லது அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளுக்கும் பிரதேச செயலகம் நடவடிக்கை எடுக்கவில்லை மக்களின் பளைய காணிகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் அடாத்தான முறையில் காணியினை கையகப்படுத்தி பாவித்து வருகின்றார்கள் ஒரு ஏக்கர் தொடக்கம் 37 ஏக்கர் வரை தனிநபர்கள் இவ்வாறு கையகப்படுத்தி வைத்துள்ளார்கள்.

இதில் அரச உத்தியோகத்தர்கள் இருக்கின்றார்கள் வியாபாரிகள் இருக்கின்றார்கள் மணல் விற்பனை செய்பவர்கள் இருக்கின்றார்கள் சமூகமட்ட அமைப்புக்களில் உள்ளவர்கள்இருக்கின்றார்கள் சில ஏழைகளும் இருக்கின்றார்கள் அவர்களை நாங்கள் அழைத்து கதைத்தவேளை அனைவருக்கும் ஏற்கனவே வேறு காணிகளுக்கு போமிட் கொடுக்கப்பட்டுள்ளது

ஆகவே ஏற்கனவே காணிகள் வைத்திருக்கும் நபர்கள் மேலதிகமாக காணியினை பிடித்து வைத்திருக்கின்றார்கள் ஒரு நபர் ஏதும் காணியில்லாமல் நாங்கள் இதில் குடியிருக்கின்றோம் என்று சொல்லவில்லை இவ்வாறானவர்கள் அனைவருக்கும் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 1,700 நபர்கள் இதுவரைக்கும் காணி இல்லாத மக்கள் இருக்கின்றார்கள் அத்துடன் நாங்கள் முதலீட்டினை ஊக்கிவிக்கின்றோம் பிரதேசத்தில் பலர் வேலை இல்லாத நிலை காணப்படுகின்றது.

கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணத்திற்கு வேலைக்கு செல்கின்றார்கள் நாங்கள் முதலீட்டிற்காக ஊக்கிவிக்கின்றோம். யாராவது முதலீடு செய்யுங்கள் என்று காணிகளை அடையாளப்படுத்தியுள்ளோம் அந்த காணிகளையும் பிடிக்கின்றார்கள்.

எல்லோருக்கும் வாழ்வாதாரம் என்று காணிகளை கொடுப்பதாக இருந்தால் மொத்த காட்டினை துப்பரவு செய்தாலும் காணாது தொழில் முயற்சியாளர்களுக்கும் காணி இல்லாமல் விண்ணப்பம் செய்த மக்களுக்கும் காணி கொடுக்கவேண்டிய தேவை உள்ளது.

இதுவரைக்கும் 66 வழக்குகள் போடப்பட்டுள்ளது நான்கு வழக்குகள் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்னும் அதிகளவான காணிகளை வெட்டிவைத்துள்ள நபர்கள் இன்னும் 100 வழக்குதாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு குடிமகனும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு