முன்னாள் போராளிகளின் புதிய ஜனநாயக அரசியல் பயணம் – “தாயக அரசியல் துறை” இன்று ஆரம்பம்

வடக்கு–கிழக்கு
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் எதிர்கால அரசியல் இலக்குகளை ஜனநாயக வழிமுறைகளின் ஊடாக முன்னெடுப்பதற்காக “தாயக அரசியல் துறை” என்ற புதிய ஜனநாயக மக்கள் அரசியல் இயக்கம் இன்று ஆரம்பிக்கப்படுகிறது.
இது தொடர்பில் குறித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் செயலாளர்நாயகமுமான செ. அரவிந்தன் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் ஆயுதப் போராட்டத்தின் வழியில் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய முன்னாள் போராளிகள், தமது வரலாற்று அனுபவங்களையும் அரசியல் உணர்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு, இனிவரும் காலத்தில் ஜனநாயக அரசியலை தமது அரசியல் கருவியாகக் கொண்டு மக்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இது கடந்த காலத்தை மறுப்பதற்கான முயற்சி அல்ல. மாறாக, கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை ஜனநாயக வழியில் முன்னெடுக்கும் புதிய அரசியல் பாதையின் தொடக்கமாகும்.
மக்கள் மயமான அரசியல் இயக்கம்
தாயக அரசியல் துறை முன்னாள் போராளிகளை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக இல்லாமல், தமிழ் மக்களின் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைக்கும் மக்கள் மயமான அரசியல் இயக்கமாக வளர்த்தெடுக்கப்படும்.
இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் பங்களிப்பையும் ஒன்றிணைத்து, மக்களின் அரசியல் பங்கேற்பை வலுப்படுத்துவதே எமது நோக்கமாகும்.
எமது அரசியல் அடித்தளம்
தாயகம் – தன்னாட்சி – சுயநிர்ணயம் – தமிழ் தேசியம் தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளை பாதுகாப்பதுடன், வடக்கு–கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பான தீர்வுகளை ஜனநாயக ரீதியில் முன்னெடுப்பதற்கு தாயக அரசியல் துறை செயற்படும்.
மக்களின் வாக்குரிமை மற்றும் ஜனநாயக பங்கேற்பை மாற்றத்திற்கான முக்கிய கருவியாகக் கொண்டு, எதிர்காலத்தில் தேர்தல் அரசியலிலும் பங்கேற்று, மக்களிடமிருந்து நேரடியான அரசியல் ஆணையைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
புதிய தலைமுறைக்கான புதிய அரசியல் பாதை “ஆயுதப் போராட்டத்தின் வழியில் நின்ற நாம், இனி ஜனநாயக அரசியலை ஆயுதமாகக் கொண்டு மக்களுடன் இணைந்து பயணிப்போம்.”
எமது அரசியல் பயணம் எந்தவொரு தனிநபரின் அதிகாரத்திற்காகவும் அல்ல. அது தமிழ் மக்களின் உரிமைகள், கண்ணியம், அரசியல் பங்கேற்பு மற்றும் எதிர்கால தலைமுறைகளின் நல்வாழ்வை மையமாகக் கொண்டதாக இருக்கும்.
தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியல் எதிர்காலத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற விரும்பும் அனைவரையும் இந்தப் புதிய அரசியல் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
thip

நல்லூரில் தியாக தீபம் திலீபனுக்கு வெண்கல உருவ சிலை

September 15, 2026

தியாக தீபம் திலீபனுக்கு நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் வெண்கல உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், நல்லூர் பின்

muk

முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்திற்கு செல்லும் பாதையில் உள்ள நினைவுக்கல் அகற்றம்

September 15, 2026

முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்திற்கு செல்லும் பாதையினை அடையாளப்படுத்தும் முகமாக புதுக்குடியிருப்பு- முல்லைத்தீவு A35 பிரதான வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுக்கல்லை வீதி

download

பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு செல்கிறார் அர்ச்சுனா; மஹிந்தவின் கூட்டத்தில் தன்னை ஒரு “புலி” என்றார்!

September 15, 2026

அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கூட்டத்தில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பு தொடர்பில் கருத்து

image_e9c84944c5

காலநிலைத் தாக்கத்திற்கு முகங்கொடுக்க விசேட அமைச்சரவைக் கூட்டம்

September 15, 2026

எல்-நினோ காலநிலைத் தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுற்றாடல் அமைச்சர் டாக்டர் தம்மிக பட்டபெந்தியின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட

**EDS: SCREENGRAB VIA PTI VIDEOS** Chennai: VCK leader Thol Thirumavalavan talks to the media, after his party received a request from TVK for support to form the Tamil Nadu government following the recent Assembly elections, in Chennai, Thursday, May 7, 2026. (PTI Photo) (PTI05_07_2026_000160B)

“தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான்; தவெக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!” – விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்

September 15, 2026

திருச்சி: திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், தமிழகத்தில் நிலவும் மின்தட்டுப்பாடு, திமுகவின்

2

அண்ணா பிறந்தநாள் பேரணிக்கு அனுமதி மறுப்பு: தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

September 15, 2026

சென்னை: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் நடைபெறவிருந்த பேரணிக்குக் காவல்துறை அனுமதி மறுத்துள்ளதற்கு,

dailythanthi_2026-09-15_epis97t5_117

சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கு எதிராக உரிமை மீறல் புகார்: சபாநாயகரிடம் திமுக எம்.எல்.ஏ.க்கள் மனு!

September 15, 2026

சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை, திமுக சட்டமன்றக் கொறடா எ.வ. வேலு தலைமையிலான திமுக

vijay-in-london

ரூ.15,300 கோடி முதலீடு; 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு! – லண்டனில் முதலமைச்சர் விஜய்யின் முன்னிலையில் மாபெரும் ஒப்பந்தங்கள் கையெழுத்து

September 15, 2026

லண்டன் / சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் இங்கிலாந்து (லண்டன்) பயணத்தின் மூலம், மாநிலத்தின் தொழில் வளர்ச்சி

1200-675-27559457-thumbnail-16x9-goldprice

காவல் துறையினர் 180 பேருக்கு ‘முதல்வரின் அண்ணா பதக்கம்’: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

September 15, 2026

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி (செப். 15), காவல் துறை மற்றும் அதைச் சார்ந்த பிற துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய

minister-jayakumar

“பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் தேவையா?” – தவெக அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் சரமாரி கேள்வி!

September 15, 2026

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் மரியாதை செலுத்திய பின்னர், முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார்

1200-675-24217931-755-24217931-1747840878798

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரும் அவதூறு வழக்கு: மு.க. ஸ்டாலினுக்குச் செப்டம்பர் 21 வரை அவகாசம் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

September 15, 2026

சென்னை: பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரும் அவதூறு வழக்கில், திமுக

dmk

“மதுராந்தகம் மக்கள் மீண்டும் தவறு செய்ய மாட்டார்கள்!” – திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமன் சூளுரை

September 15, 2026

காஞ்சிபுரம்: மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளருமான வழக்கறிஞர் ஐ. பரந்தாமன்,