முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல்ல,இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னரும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சமித்ரி ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.