மீனவப் படகுகள் மீதான தாக்குதல்: அரசாங்கம் தொடர் விசாரணை

இலங்கை கடற்பரப்பில் இரண்டு மீனவப் படகுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், அரசாங்கம் என்ற ரீதியில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.

ஹிக்கடுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டத்தில் இன்று (07) கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை கடற்படைக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தத் தாக்குதல் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்ததாகவும், அதில் இந்திய கடற்படையோ அல்லது இந்திய கடலோரக் காவல்படையோ இச்சம்பவத்துடன் தொடர்புபடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், எவ்வாறாயினும் இது குறித்து உண்மைகளைக் கண்டறிய அமைச்சு தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

இது குறித்து மேலதிகமாக கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே:

“கடந்த நாட்களில் இலங்கை கடற்பரப்பில் எமது இரண்டு மீனவப் படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எமது அண்டை நாடான இந்தியாவின் கடலோரக் காவல்படையினரே இத்தாக்குதலை நடத்தியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். நாம் ஓர் அரசாங்கம் என்ற வகையில் இது குறித்து ஆராய வேண்டும். எனவே கடற்படைக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் இது பற்றி விசாரிக்குமாறு கூறினோம். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்திய உயர்ஸ்தானிகர், இது இந்திய கடலோரக் காவல்படையினராலோ அல்லது இந்திய கடற்படையினராலோ மேற்கொள்ளப்பட்டதல்ல என்று மறுத்துள்ளார்.

எனினும் ஓர் அரசாங்கமாகவும், அமைச்சாகவும் நாம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம். எமது நாட்டு மீனவ மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமக்கு அவசியமாகும். இது குறித்து ஆராய்ந்து சரியான அறிக்கையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இது வெளிநாட்டினராலா, நம் நாட்டவர்களாலா, வேறு கும்பலா, உத்தியோகபூர்வ குழுவா அல்லது உத்தியோகபூர்வமற்ற குழுவா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அதைத்தான் நாம் செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது