மீண்டும் அம்புலுவாவ மலையில் பாரிய அனர்த்தம்?

அம்புலுவாவ மலை அடிவாரத்தில் இருக்கும் கிராமங்கள் மீண்டும் மண்ணில் புதையுண்டு போகலாம் என கம்பளை பிதேசத்தின் செயலாளர் ஆத்மா தில்ருஷி ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

பிரதேச செயலாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு மண்சரிவு மற்றும் பாரிய கற்கள் சரிந்து பாரிய அழிவு ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே தான் மீண்டும் அறியத் தருகின்றோம். மண்சரிவு ஏற்பட்டு பாரிய அழிவை சந்தித்த நிலையில் மீளவும் வெடிப்புக்கள் மற்றும் பாரிய கற்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு பின்னரும் பொறுப்பான அதிகாரிகள் கனயீனமாக விடாது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, கம்பளை பிதேசத்தில் உள்ள கிராமசேவகர்கள் அநேகர் தங்களின் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் கற் பாறைகளில் ஏற்பட்டுள்ள வெடிப்புகள் தொடர்பில் புகைப்பட சாட்சிகளுடன் பிரதேச செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்புலுவாவ மலையில் அரச காணிகளில் சட்டவிரோத கட்டிடங்கள் மற்றும் பல சட்டவிரோத நடவடிக்கைகளால் இவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், சில அரச கட்டிடங்கள் வெளியாருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளன. மலை உச்சியில் பல பாரிய கற்கள் வெடி வைக்கப்பட்டு தகர்க்கப்பட்டுள்ளன. அதனால் எதிர்வரும் பாரிய அழிவுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இதன்போது அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.