“மா.சுப்பிரமணியனை தோற்கடித்த சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு நல்ல சாவு வராது!” – ஆர்.எஸ்.பாரதி கடும் சாபம்!

சென்னை
சைதாப்பேட்டை தொகுதியில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு வாக்களிக்காத மக்கள் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொடுத்த சாபம் தற்போது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“தண்ணீர் வர வாய்க்கால் வெட்டுகிறோம்”:
சென்னை காரப்பாக்கத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தார். “1996-ல் இருந்து 2001 வரை இவ்வளவு சாதனைகள் செய்தும் தோற்றுவிட்டோமே என்று கலைஞரிடம் கேட்டபோது, ‘அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இப்போதுதான் வாய்க்கால் வெட்டிக்கொண்டு இருக்கிறோம்; 5 ஆண்டு கழித்துத் தண்ணீர் நாம் வெட்டும் பாதையில் தானாக வரும்’ என்று அவர் உற்சாகமாகச் சொன்னார். அதையேதான் இன்று நானும் உங்களுக்குச் சொல்கிறேன்,” என்றார்.
“விசிலுக்கு ஓட்டுப் போட்டுவிட்டு கஞ்சா அடிக்கிறார்கள்”:
தொடர்ந்து பேசிய அவர், “வீட்டு வரி உயர்ந்துவிட்டது என்று பேசுகிறீர்கள், அதைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை? வாயை மூடிவிட்டுச் சும்மா இருங்கள். நாம் கட்டிக் கொடுத்த ஏசி பஸ் ஸ்டாப்பில் எல்லாம் விசிலுக்கு ஓட்டுப் போட்டுவிட்டு, கஞ்சா அடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். இனிமேலாவது கட்சியின் வரலாறு என்ன? எல்லாரும் சமமாக உட்கார்ந்திருக்கக் காரணம் யார்? என்பதை ஊருக்குச் சொல்லிக்கொடுங்கள்,” என்று ஆவேசமாகப் பேசினார்.
“நல்ல சாவே வராது” – வாக்காளர்களுக்குச் சாபம்:
“சைதாப்பேட்டை தொகுதிக்கு மா.சுப்பிரமணியன் கொண்டு வந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் ஓட்டுப் போட்டிருந்தால் கூட நாம் வெற்றி பெற்றிருப்போம். உயிர் காப்பது என்பது அவ்வளவு கஷ்டமான காரியம். எத்தனை பேர் உயிரை அவர் காப்பாற்றியிருப்பார். ஆனால், அவருக்கு வாக்களிக்காத அவர்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது என்று நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். மக்கள் தங்கள் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுள்ளனர். சைதாப்பேட்டையில் மா.சுப்பிரமணியன் போல யாரும் இவ்வளவு வேலை செய்யவில்லை,” என்று கடுமையாகச் சாபமிட்டார்.
“இனி மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம்”:
இறுதியாகக் கட்சித் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கிய ஆர்.எஸ்.பாரதி, “இனிமேல் பொது மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம். இனி நம்ம கட்சிக்காரர்களுக்கு மட்டும் செய்யுங்கள், அது போதும். இனி ஒரு 5 ஆண்டுகளுக்கு நாம் அமைதியாக ஓய்வு எடுப்போம்,” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
#RSBharathi #MaSubramanian #Saidapet #DMK #TNPolitics #TamilNaduNews #Chennai #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates
go

50 கிராம் தங்கக்கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி

August 24, 2026

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கடி “தங்கம் தின்னும் மிருகம்” (அதிகமாகப் பணம் செலவழிப்பவர்கள் என்ற என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு.

phi

தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

August 24, 2026

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க

sak

கிளிநொச்சியில் விபத்து: அல்வாய் இளைஞன் உயிரிழப்பு

August 24, 2026

கிளிநொச்சி பளைப் பகுதியில் சனிக்கிழமை (22.08.2026) மாலை நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

j

ஜப்பானின் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 37 பேர் காயம்

August 23, 2026

டோக்கியோவிற்கு வடகிழக்கே உள்ள இபராக்கி மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், குறைந்தபட்சம் 37 பேர்

1376391

“எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!” – தவெக அரசுக்கு சிபிஐ மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

August 23, 2026

சென்னை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர்

images - 2026-08-23T201653.538

“கலைஞராக இருந்தாலும் தோற்கடித்திருப்பேன்!” – மு.க.ஸ்டாலினைச் சாடிய தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு அதிரடி!

August 23, 2026

ன்னை சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் (தவெக) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, முதலமைச்சர் விஜய்

hindutamil-prod_2026-07-25_wfbbokby_09c42ddb-771b-4856-8469-a2bd3d39469a

“அறநிலையத்துறை செயல்பாடுகளைச் சேகர்பாபு வேவு பார்ப்பது ஏன்?” – அமைச்சர் ரமேஷ் சரமாரி கேள்வி!

August 23, 2026

திருச்சி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது அடுக்கடுக்கான