மஸ்கெலியா பிரதேச சபையின் 2026 ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் (பாதீடு) மூன்று மேலதிக வாக்குகளால், வியாழக்கிழமை (18) அன்று நிறைவேற்றப்பட்டது.
“பட்ஜெட் நிறைவேற்றப்பட்டமை, மக்களின் நம்பிக்கைக்கும், சபையின் பொறுப்புணர்ச்சிக்கும் கிடைத்த சான்றாகும். எதிர்வரும் காலப்பகுதியிலும் மஸ்கெலியா மக்களின் நலனுக்காக உறுதியுடன் செயல்படுவோம்” என தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தெரிவித்தார்.
வரவு –செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 06 பேர், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இருவர், சுயேச்சை உறுப்பினர்கள் இருவர் என 10 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஏழு பேரும் பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.