மலையக மக்களுக்கு மட்டக்களப்பிலிருந்து உலர் உணவு…

மட்டக்களப்பில் உள்ள களுதாவளை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம் மற்றும் களுதாவளை பொதுமக்களின் ஆதரவுடன் சுமார் 1200க்கு மேற்பட்ட உலர் உணவுப் பொதிகள் மலையக மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் மலையகத்தை புரட்டிப் போட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் சிக்கி இன்று வரை 627 பேர் உயிரிழந்ததோடு, 190 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் 611,530 குடும்பங்களைச் சேர்ந்த 2,179,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டித்வா புயலினால் மலையக மக்கள் தமது இருப்பிடங்களை முற்றாக இழந்து நிர்க்கதியாகியுள்ள நிலையில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும், பலரும் தம்மால் இயன்ற உதவிகளை நல்கி வருகின்றனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம் மற்றும் களுதாவளை பொதுமக்களின் ஆதரவுடன் சுமார் 1200க்கு மேற்பட்ட உலர் உணவுப் பொதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

அவற்றை மலையக மக்களுக்கு நேரடியாகவே கொண்டு சேர்க்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பொதியும் தலா 600 ருபாவுக்கு அதிக பெறுமதியானவை என்பதுடன், அப்பொதிகளுக்குள் அரிசி, பருப்பு, பால்மா, ரின்மீன், சோயா உள்ளிட்ட பல உலர் உணவுப் பொருட்கள் அடங்கியுள்ளன.

chinm

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு விளைவிக்கிறார் சின்மயி!

December 8, 2025

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் நடந்து கொண்ட பாடகி சின்மயி, அதற்காக மன்னிப்பு

chira

சிரஞ்சீவி – நயன்தாரா இணைவு

December 8, 2025

நடிகர் சிரஞ்சீவி நடிகை நயன்தாரா நடித்துள்ள புதிய படத்தில் இருந்து சசிரேகா எனும் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. நடிகர் சிரஞ்சீவியின்

chami_1

பெண் விமானியின் கோரிக்கை; தந்தை வழித்தன்மையை உறுதிப்படுத்த கிரிக்கெட் வீரர் மறுப்பு

December 8, 2025

தனது குழந்தையின் தந்தைவழித்தன்மையை உறுதிப்படுத்த டி.என்.ஏ அறிக்கையைப் பெற நீதிமன்ற உத்தரவைக் கோரிய பெண் விமானியின் கோரிக்கைக்கு கிரிக்கெட் வீரர்

nori

பிரித்தானியாவின் நொரிஸ் முதற் தடவையாக சம்பியனானார்

December 8, 2025

முதற் தடவையாக மக்லரன் அணியின் லான்டோ நொரிஸ் போர்மியுலா வண் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற அபு தாபி குரான்

sel

செல்டா விகோவிடம் தோற்ற றியல் மட்ரிட்

December 8, 2025

ஸ்பானிய லா லிகா தொடரில், தமது மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற செல்டா விகோவுடனான போட்டியில் 0-2 என்ற

chi

மனித நுகர்வுக்கு பொருந்தாத 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு சீல்

December 8, 2025

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12,000 கிலோகிராம் இறைச்சி, மனித நுகர்வுக்கு ஏற்றதல்ல

water fal

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன?

December 8, 2025

நாட்டில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் இயல்பு நிலைக்குத் திரும்புவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் துறையின் அளவீட்டு

nuw

டித்வா சூறாவளியால் விவசாயத் துறைச் சேதம்; ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு

December 8, 2025

டித்வா சூறாவளியால் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய்வதற்கும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய அவசர

kalv

கால்வாய்களை சீரமைக்கும் பணி

December 8, 2025

‘திட்வா’ புயலால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, சேதமடைந்த நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்களை விரைவாக முன்னைய நிலைக்கு கொண்டுவந்து, வயல்கள்

ditv

மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்

December 8, 2025

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய

dama

பாதகமான வானிலை; சேதமடைந்த இணைப்புகளை சேதப்படுத்த வேண்டாம்

December 8, 2025

தற்போதைய பாதகமான வானிலை காரணமாக பல பகுதிகளில் சேதமடைந்த தொலைத்தொடர்பு கேபிள்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு டயலொக் ஆக்சியாட்டா, பொலிஸ்

nivara

நிவாரண உதவிகளை ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம்

December 8, 2025

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு