சப்பு மற்றும் இலவன் மரப்பலகைகளின் நடுவில் மிகவும் சூட்சுமமான முறையில் நுட்பமாக மறைத்து பல லட்சம் ரூபா பெறுமதியான மவோகனி மரப்பலகைகளை அனுமதி பத்திரமின்றி ஏற்றிவந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு, மரப்பலகைகளை ஏற்றிவர பயன்படுத்திய லொறியினை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.
கேகாலை பகுதியில் இருந்து ஹட்டன் குடாகம பகுதியில் உள்ள மர ஆலை ஒன்றிற்கு அனுமதியின்றி மோசடியாக கடத்தப்பட்ட அ மகோகனி மரப்பலகைகளே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஹட்டன் குடாகம பகுதியில் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் குறித்த லொறியினை சோதனை செய்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த மரப்பலகைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களும், மரக்கட்டைகள் ஏற்றப்பட்ட லொறியும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.