மத்திய வங்கியின் இலக்குகள் அடுத்த வருடத்துக்குள் அடையப்படும்!

பணவீக்க மற்றும் நிதியியல் ஸ்திரத்தன்மைசார் இலக்குகள் அடுத்த வருடத்துக்குள் அடையப்படும் எனவும், தற்போது பதிவாகியுள்ள மற்றும் எதிர்வுகூறப்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி வீதமானது ஆரோக்கியமானதும், நிலையானதுமான மட்டத்தில் காணப்படுவதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் மேற்கொள்ளப்படும் நிதியியல் முறைமை மீளாய்வு தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கிலான செய்தியாளர் சந்திப்பொன்று வியாழக்கிழமை (23) கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது பொருளாதார வளர்ச்சி, பணவீக்க நிலைவரம் மற்றும் எதிர்கால எதிர்வுகூறல்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி தற்போது அசாதாரண மட்டத்திலான பணச்சுருக்க நிலைமை பதிவாகியிருப்பதாகவும், இருப்பினும் மத்திய வங்கியினால் இலக்கிடப்பட்டுள்ளவாறு அடுத்த ஆண்டு பணவீக்கத்தை 5 சதவீத மட்டத்துக்குக் கொண்டுவரமுடியும் என எதிர்பார்ப்பதாகவும், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது நிதியியல் ஸ்திரத்தன்மை குறிப்பிடத்தக்களவினால் முன்னேற்றமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று ‘பொருளாதார மீட்சியைப் பொறுத்தமட்டில், பொருளாதாரமானது தொடர்ச்சியாக 5 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்துவருகின்றது. 2022 – 2023 இல் முகங்கொடுக்கநேர்ந்த தீவிர நெருக்கடியின் பின்னர், இப்போது பதிவாகியிருக்கும் பொருளாதார வளர்ச்சியானது மிகவும் ஆரோக்கியமான மட்டத்தில் இருப்பதாகவே நான் கருதுகின்றேன்’ எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு முதன்நிலை மீதி மற்றும் வருமான இலக்குகள் உள்ளடங்கலாக முக்கிய நிதியியல் இலக்குகளைத் தாண்டும் நிலையில் இலங்கை இருப்பதாகவும், இது நாட்டின் கடன் ஸ்திரத்தன்மையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் 2025 இல் வாகன இறக்குமதிக்காக இலங்கையர்கள் சுமார் 1.5 பில்லியன் டொலர்களை செலவிடுவர் எனத் தெரிவித்த ஆளுநர் நந்தலால் வீரசிங்க, இது முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் உயர்வானதாகும் என்றார்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய