மத்திய கிழக்கை சூளும் போர் பதற்றம்…

ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி, கடந்த நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்து கலந்து கொண்டு வந்த விமானப்படை தளபதிகளுடனான ஆண்டு கூட்டத்தை இந்த ஆண்டு முதன்முறையாக தவிர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.

இந்த நிகழ்வு, அமெரிக்கா வளைகுடா (Gulf) பிராந்தியத்தில் தனது இராணுவ இருப்பை அதிகரித்து வரும் நேரத்தில் நிகழ்ந்துள்ளது.

இதனால், இரு நாடுகளுக்கிடையே மோதல் தீவிரமடையலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

1989ஆம் ஆண்டு ஈரான் உச்ச தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து, பிப்ரவரி 8 அன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் அலி கமெனி ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கலந்து கொண்டுள்ளார்.

அதனால், இந்த ஆண்டு அவர் பங்கேற்காதது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு கூட்டம், ஈரான் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகின்றது.

1979ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியின் போது, விமானப்படை அதிகாரிகள் குழு, இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் அயதுல்லா அலி கமேனிக்கு விசுவாசம் தெரிவித்த நிகழ்வை பெப்ரவரி 8 நினைவுகூருகிறது.

இந்த நிகழ்வே பஹ்லவி அரச வம்சத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

அதன்பிறகு, ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் விமானப்படை தளபதிகள், நாட்டின் மதத் தலைமைத்துடன் சந்தித்து வந்தனர்.

கடந்த நான்கு தசாப்தங்களாக, கொரோனா தொற்று காலத்திலும் கூட, கமெனெி இந்த கூட்டத்தில் தொடர்ந்து கலந்து கொண்டார்.

ஆனால், இந்த ஆண்டு அவர் அந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக, ஈரான் ஆயுதப்படைகளின் தலைமை தளபதி அப்துல்ரஹீம் மூசாவி, விமானப்படை தளபதிகளை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துள்ளார்.

இந்த அசாதாரண மாற்றம், பாதுகாப்பு காரணங்களால் காமெனி பொதுவெளியில் தோன்றுவதை தவிர்த்திருக்கலாம், அல்லது முக்கிய தேசிய விவகாரங்களில் கவனம் செலுத்தி வரலாம் என்ற ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

கமெனி கூட்டத்தை தவிர்த்தது, தெஹ்ரான்–வொஷிங்டன் உறவுகள் கடும் பதற்றத்தில் உள்ள நேரத்தில் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்கா, வளைகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதல் கடற்படை மற்றும் விமானப்படை வளங்களை நிலைநிறுத்தி வருகிறது.

இதற்கு பதிலளித்த ஈரான், அமெரிக்கா எந்தவொரு இராணுவ நடவடிக்கையையும் தொடங்கினால், அது முழு மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் பரவக்கூடிய போராக மாறும் என்று பலமுறை எச்சரித்துள்ளது.

முன்னதாக பிராந்திய மோதல்களில் சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

அமெரிக்கா, ஈரானின் ஏவுகணை திட்டத்தையும் பேச்சுவார்த்தையில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதே நேரத்தில், அணு திட்டம் மட்டுமே பேச்சுவார்த்தை பொருளாக இருக்க வேண்டும் என ஈரான் தெரிவித்து வருகிறது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்