மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை–மனித மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சுற்றாடல் அமைச்சர் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தபோது வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (25) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்ட போதிலும், நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு எட்டப்படாமை குறித்துக் கவலை வெளியிடப்பட்டது.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துன்நெத்தி, பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்காகக் காடுகள் அழிக்கப்படுவதே யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைய முக்கிய காரணமாகும். மகாவலி திட்டத்தின் மூலம் தண்ணீர் வருகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், யானைகளின் வருகை மட்டும் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகக் கூட்டத்தில் விசனம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், மகாவலி திட்டத்தை முன்னிறுத்தி இடம்பெறும் பாரிய அளவிலான மண் அகழ்வு காரணமாக, மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

தொடர்ச்சியான கனமழை மற்றும் அண்மையில் ஏற்பட்ட புயல் காரணமாக மாவட்டத்தில் நெற்பயிர்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. அறுவடைக்காலத்திலும் நெல்லை உலர வைக்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். ஈரநெல்லை 5,000 ரூபாய்க்குக்கூட விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் காப்பீட்டு நிவாரணம் பெற முற்பட்டபோது, 2026 பெப்ரவரி 13 ஆம் திகதியுடன் காப்பீட்டுக் காலம் முடிவடைந்ததாகக் கூறி நிவாரணம் மறுக்கப்படுவது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தலைமையிலான உள்ளூராட்சி சபைகள் முன்வைக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில், உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர் தரப்பில் திட்டமிட்ட தாமதங்கள் நிலவுவதாகச் சந்தேகம் வெளியிடப்பட்டது. குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சி சார்ந்த உள்ளூராட்சி அமைப்புகளின் பணிகளைத் தடுக்க முயற்சி நடைபெறுகின்றதா என்ற கேள்வியும் இதன்போது எழுப்பப்பட்டது.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய