மணிக்கு 7,400 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப் பாயும் ‘த்வனி’ ஹைப்பர்சோனிக் ஏவுகணை டிசம்பரில் சோதனை!

மணிக்கு 7,400 கிமீ வேகத்​தில் சீறிப் பாயும் த்வனி ஏவு​கணை டிசம்​பரில் சோதனை செய்​யப்​படும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்ளன.

ஏவு​கணை தொழில்​நுட்​பத்​தில் ரஷ்​யா, அமெரிக்​கா, சீனா ஆகியவை முன்​னோடிகளாக உள்​ளன. இந்த நாடு​களுக்கு இணை​யாக இந்​தி​யா​வும் ஏவு​கணை தொழில்​நுட்​பத்​தில் அதிவேக​மாக முன்​னேறி வரு​கிறது. குறிப்​பாக இந்​தி​யா​வின் பிரம்​மோஸ் ஏவு​கணைக்கு உலகம் முழு​வதும் வரவேற்பு கிடைத்​திருக்​கிறது.

தற்​போது பிரம்​மோஸை​விட அதிவேக​மாக சீறிப் பாயும் த்வனி என்ற ஏவு​கணையை மத்​திய பாது​காப்பு ஆராய்ச்​சி மற்றும் மேம்​பாட்டு நிறு​வனம் (டிஆர்​டிஓ) தயாரித்து உள்​ளது. இந்த ஹைப்​பர்​சோனிக் ஏவு​கணை மணிக்கு 7,400 கி.மீ. வேகத்​தில் சீறிப் பாயும் திறன் கொண்​ட​தாகும். இதுகுறித்து டிஆர்​டிஓ வட்​டாரங்​கள் கூறிய​தாவது:

ஹைப்​பர்​சோனிக் ஏவு​கணை​கள் ஒலியை​விட 5 முதல் 6 மடங்கு வேகத்​தில் சீறிப் பாயும். இந்த வகை ஏவு​கணை முதலில் வானத்தை நோக்கி சுமார் 100 கி.மீ. தொலைவை தாண்டி செல்​லும். அதாவது வளிமண்​டலத்தை தாண்டி சென்​று​விடும். பின்​னர் விண்​வெளி​யில் இருந்து பூமியை நோக்கி சீறிப் பாய்ந்து நிர்​ண​யிக்​கப்​பட்ட இலக்கை மிகத் துல்​லிய​மாக தாக்கி அழிக்​கும். ஹைப்​பர்​சோனிக் ஏவு​கணை​களை ரேடாரில் கண்​டறிவது கடினம்.

தற்​போது ரஷ்​யா, அமெரிக்​கா, சீனா​விடம் மட்​டுமே ஹைப்​பர்​சோனிக் ஏவு​கணை​கள் உள்​ளன. இந்த வரிசை​யில் இந்​தி​யா​வும் இணைய இருக்​கிறது. இந்த ஏவுகணை 9 மீட்​டர் நீளம், 2.5 மீட்​டர் அகலம் கொண்​ட​தாகும். சுமார் 6,000 கி.மீ. முதல் 10,000 கி.மீ. தொலைவு வரையி​லான இலக்​கு​களை துல்​லிய​மாக தாக்கி அழிக்க முடி​யும். சர்​வ​தேச அரங்​கில் ரஷ்​யா​வின் அவான்​கார்​டு, அமெரிக்​கா​வின் டார்க் ஈகிள், சீனா​வின் டிஎப்​-இசட்​எப் ஆகிய ஹைப்​பர்​சோனிக் ஏவு​கணை​கள் மிக​வும் சக்​தி​ வாய்ந்​தவை என்று கருதப்​படு​கிறது. இந்த ஏவு​கணை​களுக்கு இணை​யாக த்வனி ஏவு​கணை உள்​நாட்டு தொழில்​நுட்​பத்​தில் தயாரிக்​கப்​பட்டு இருக்​கிறது.

இதன்மூலம் எதிரி​களின் அணு ஆயுத அச்​சுறுத்​தல்​களை திறம்பட எதிர்​கொள்ள முடி​யும். மேலும் எதிரி​களின் போர்க்​கப்​பல் உட்பட எந்த இலக்​கை​யும் துல்​லிய​மாக தாக்கி அழிக்க முடி​யும். இந்த ஆண்டு இறு​திக்​குள் த்வனி ஏவு​கணை சோதனை செய்​யப்​படும். வரும் 2029-ல் இந்​திய ராணுவத்​தில் ஏவு​கணை சேர்க்​கப்​படும்.

அமெரிக்​கா​வின் தாட் வான் பாது​காப்பு கவசம், இஸ்​ரேலின் அயர்ன் டோம் வான் பாது​காப்பு கவசத்​தால்​கூட த்வனி ஏவு​கணையை இடைமறித்து அழிக்க முடி​யாது. இவ்​வாறு டிஆர்​டிஓ வட்​டாரங்​கள்​ தெரி​வித்​தன.த்வனி ஏவுகணையின் மாதிரி.

ind

இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள்

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணிப் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களை, இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக

gun

வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

March 5, 2026

மத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட