மட்டக்களப்பு A15 வீதி சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்

அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்குக் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு A15 பிரதான வீதியைச் சீரமைக்கும் பணிகள் இன்று (3) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வெள்ள அனர்த்தத்தால் துண்டிக்கப்பட்டிருந்த மூதூர் பிரதேசம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான அதிரடி நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

​கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால், A15 வீதி பலத்த சேதமடைந்தது. குறிப்பாக, முதூர் பிரதேசம் கடந்த ஐந்து நாட்களாக வெளி உலகத்துடனான தொடர்பை முற்றிலுமாக இழந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.​

இதேபோல், மூதூர் இறால்குழி பிரதேசத்தில், சுமார் 800 மீட்டர் தூரமான வீதி வெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தற்போது வாகனப் போக்குவரத்து செய்ய முடியாத அளவுக்குக் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றது.​

இந்த நிலையில், துண்டிக்கப்பட்டிருந்த மூதூர் பிரதேசத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் நோக்கில், அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை ஆரம்பித்துள்ளது.​

இந்த வீதி சீரமைக்கும் பணிகள் அனைத்தும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் வெளிவிவகாரப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் நேரடி கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, மூதூர் 223 வது இராணுவ படைப்பிரிவின் கட்டளை தளபதி இந்திக்க குணவர்த்தன, கிண்ணியா 15 வது மைல் ராணுவ பொறுப்பதிகாரி கேனல் குமார, மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எல். பி. ஜெயவர்த்தன ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

​சீரமைப்புப் பணிகள் குறித்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, “இன்றைய தினம் இன்னும் சில மணி நேரங்களில் சீரமைக்கும் பணிகள் நிறைவுபெறும்.

அதன் பின்னர் இன்றைய தினமே மக்கள் போக்குவரத்திற்காக இந்த வீதியைப் பயன்படுத்த முடியும் எனவும்” நம்பிக்கை தெரிவித்தார்.​

இதன் மூலம், ஐந்து நாட்களாகத் துண்டிக்கப்பட்டிருந்த பிரதேசம் மீண்டும் இணைக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை விரைவில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“சுயநலத்திற்காக அல்ல, சுயமரியாதைக்காக!” – தவெக-வில் இணைந்த 3 முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பரபரப்பு விளக்கம்!

May 26, 2026

சென்னை: “நாங்கள் எங்களது பதவிகளை ராஜினாமா செய்தது சுயநலத்திற்காக அல்ல; எங்களது தார்மீகச் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவும், அதிமுக-வை அடகு

45

கனடாவில் சர்வதேச ரீதியிலான குற்றங்களுடன் தொடர்புடைய 17 பேர் கைது

May 26, 2026

பீல் பிராந்தியத்தில் உள்ள தென் ஆசிய வணிக உரிமையாளர்களை குறிவைத்து செயல்பட்டதாகக் கூறப்படும் ஒரு சர்வதேச ரீதியிலான குற்றங்களுடன் தொடர்புடைய

accident

கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து; சிறுவன் உயிரிழப்பு – பெற்றோர் படுகாயம்

May 26, 2026

கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு, வீதியோரமிருந்த மதிலுடன் மோதி இடம்பெற்ற கொடூர விபத்தில் 12 வயதுடைய சிறுவன்

sha

விமல்வீரவங்சவின் மனைவிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

May 26, 2026

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, கடவுச்சீட்டு பெற்றதாக சஷி வீரவங்சவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணை ஜூலை 24 ஆம்

Anunayake

தற்போது பௌத்த சாசனத்திற்கு இருண்ட காலம் ஏற்பட்டுவிட்டது…

May 26, 2026

பௌத்த சாசனத்திற்கு தற்போது ஒரு இருண்ட காலம் உருவாகியுள்ளதாகவும், இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பௌத்த சமூகத்தின் நான்கு பிரிவினரும் ஒன்றிணைய

ele

தேர்தல் சட்டங்கள் மீளாய்வு

May 26, 2026

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான

f

தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடைவதால் பழிவாங்கல் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன!

May 26, 2026

தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடையப் போகின்ற காரணத்தினாலேயே இவ்வாறான பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்

road-accident-1fbe3bd4f584940d0e9afe28e5117426-1

ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து வயலுக்குள் கவிழ்ந்து விபத்து!

May 25, 2026

கஹதுடுவ, தியகம வீதியில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று இன்று (25) மாலை வீதியை விட்டு விலகி வயல்வெளியொன்றுக்குள்

Weather war

தொடரும் மண்சரிவு எச்சரிக்கை

May 25, 2026

ஆறு மாவட்டங்களிலுள்ள 24 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கைகளைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி

vesa

வடக்கில் வெசாக் நிகழ்வுகளுக்கு தடை?

May 25, 2026

தன்சல் நடத்துவது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் போலிச் செய்தி குறித்து வட மாகாண ஆளுநரினால் அறிக்கை ஒன்று

WhatsApp Image 2026-05-25 at 22.57.47

கரடிப்போக்கு – உருத்திரபுரம் வாகன விபத்தில் இளம் தாய் பலி

May 25, 2026

கரடிப்போக்கு – உருத்திரபுரம் வாகன விபத்தில் இளம் தாய் பலிகிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடிப்போக்கு – உருத்திரபுரம் பகுதியில் இன்று

par

சிறுவர் துஷ்பிரயோகம்: எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் தீர்மானம்

May 25, 2026

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து