மக்களின் வறுமை குறித்த சரியான நிலைப்பாடொன்று அரசாங்கத்திடம் இல்லை – சஜித் பிரேமதாச

மக்கள் மாற்றுத் தரப்பை நாடியிருந்தாலும், அந்த மாற்றுத் தரப்பு சரியாக அமைந்து காணப்படாமையினால் அவர்களின் எதிர்பார்ப்புகள் இன்று தோல்வி கண்டுள்ளன. கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்திற்கு கோடிக்கணக்கான ரூபா ஒதுக்கப்பட்டுள்ள தருணத்தில் நாட்டில் வறுமை அதிகரித்து காணப்படுகின்றன. அரசாங்கத்திடம் தற்போது வறுமை குறித்த சரியான நிலைப்பாடொன்று இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மாத்தறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடான சந்திப்பில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும்போதே சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போதைய அரசாங்கத்தின் கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் என்பது தமது நண்பர்களுக்கு திறைசேரியை காலி செய்ய வழங்கப்பட்ட சந்தர்ப்பமாகும். தற்போது, நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து, மக்கள் மத்தியில் இரத்தச் சோகை ஏற்படும் நிலையும் அதிகரித்து காணப்படுகின்றன. இதற்கு வறுமையே காரணமாகும். இவற்றுக்கெல்லாம் அரசியலமைப்பு எதேச்சதிகாரத்தை கொண்டு வருவதே இந்த ஆளும் தரப்பினர்களிடம் காணப்படும் ஒரே தீர்வாக அமைந்து காணப்படுகின்றது.

புதிய அரசியல் கலாசாரத்தை கொண்டு வருவோம் என மக்களுக்கு வாக்குறுதிகள் பல வழங்கி ஆட்சிக்கு வந்த இவர்கள், சிவில் பாதுகாப்பு குழுக்கள், இளைஞர் கழகங்கள் மீது அழுத்தம் கொடுத்து, மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் கட்டமைப்பை கீழ் மட்டத்தில் பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவை அனைத்தையும் அவர்கள் பெலவத்தை கட்சி காரியாலயத்தில் இருந்து மேற்கொண்டு வருவதை வெட்கமில்லாமல் ஏற்றும் கொள்கின்றனர்.

இவை சமூகத்தில் அமைந்து காணப்படும் ஜனநாயக அமைப்புகளாகும். ஜனநாயக அமைப்புகள் ஊடாக கட்சி அரசியலை பலப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு இவர்கள் மாறு செய்கின்றனர். மக்கள் இந்த கலாசாரத்தை எதிர்பார்க்கவில்லை.

அரசாங்கம் தற்சமயம் சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்தும் விதமாக செயற்பட்டு வருகிறது. சர்வதேச நாணய நிநியம் விதித்த இலக்கையும் தாண்டி, அரச வருவாயை ஈட்டிக் கொண்டாலும், அதனை மக்களுக்கு பயனளிக்கும் விதமாக நிவாரணங்கள் எதனையும் இதுவரையில் பெற்றுக் கொடுக்கவில்லை. வரிகளை அதிகரித்து, செலவினங்களைக் குறைத்துக் கொண்டமையினால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

அபிவிருத்திக்கும், நலன்புரித் திட்டங்களுக்குமான நிதியை ஒதுக்காது, வரிகளை அதிகரித்து, திறைசேரியை நிரப்புவதால் பயனில்லை. செலவுகளைக் குறைத்து, வரி வருவாயை அதிகரித்து அதன் மூலம் பில்லியன் கணக்கான நிதியை சேமிப்பது சிறந்த செயல் அல்ல என்றார்.

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்