மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க தவறினால் எமக்கு ஏற்பட்ட நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் – ராேஹித்த அபேகுணவர்த்தன

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடத்தில் இடம்பெற்ற பெரும்பாலான கூட்டுறவு சங்க தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. இது அரசாங்கத்துக்கு நல்லதில்லை. அதனால் அரசாங்கம் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க தவறினால், எமது அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ராேஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜனாதிபதி வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும்போது அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆளும் தரப்பினர் மொத்தமாக 83 தடவைகள் கைதட்டி வரவேற்றனர். இவ்வாறுதான் நாங்களும் அன்று கைதட்டி வரவேற்றோம். ஆனால் இரவில் நித்தரைகொண்டு எழும்பும்போது எமது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

எமது அரசாங்கம் இல்லாமல்போயுள்ளது. இவ்வாறு நாங்கள் நினைத்துப்பார்க்காத விடயங்கள் இடம்பெறுகிறது என்பதை நாங்கள் நினைவில்கொள்ள வேண்டும்.

அத்துடன் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பயன்படுத்தும் தீவிர ஆயுதம்தான் பொய். ஆனால் பெற்றுக்கொண்ட அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்ள அந்த பொய்யை பயன்படுத்த முடியாது. அந்த ஆயுதத்தை மக்கள் நம்பப்போவதில்லை. இந்த வரவு செலவு திட்ட விவாத்தத்தின்போது எதிர்க்கட்சிகள் முன்வைத்த பிரதான

குற்றச்சாட்டு, இந்த அரசாங்கம் 2025 வரவு செலவு திட்டத்தில் பிரேரித்த முன்மொழிவுகளில் 50 வீதத்தைக்கூட பூரணப்படுத்தவில்லை என்பதாகும். இதற்கு காரணம் என்ன என்பதை தேடிப்பாருங்கள். அதேபோன்று அடுத்த வருடத்துக்கு சமர்ப்பித்திருக்கும் வரவு செலவு திட்டத்தில் பல்வேறு பிரேரணைகள் முன்மொழியப்பட்டிருக்கின்றன. அடுத்த வருடம் டிசம்பர் மாதமாகும்போது இந்த பிரேரணைகளில் 50வீதமாவது பெய்து முடிக்கும் என நம்பிக்கை இல்லை.

ஏனெனில் இந்த நாட்டில் 17 இலட்சம் அரச ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்களை அரசாங்கம் தற்போது பயமுறுத்தி இருக்கிறது. அவர்கள் விரைவாக தீர்மானங்களை எடுப்பதில்லை. பிரதேச செயலாளர் முதல் ஜனாதிபதி செயலாளர் வரை, நல்ல வேலைத்திட்டத்துக்காக தவறான முறையில் கைச்சாத்திட்டு பிற்காலத்தில் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படும்போது அவர்களை பாதுகாக்க யாரும் முன்வருவதில்லை. அதனால்தான் இந்த அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு வேலை செய்ய முடியாமல் போனதற்கு காரணமாகும். முற்படுவதில்லை.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தில், அரசாங்கத்தின் பிரபல்லியம் குறைவடைந்து வருகிறது. அரசாங்கத்துக்கு எதிராக முதலாவதாக வீதிக்கி இறங்கி இருப்பது விவசாயிகளாகும். இவர்கள்தான் இந்த அரசாங்கத்துக்கு முழுமையாக வாக்களித்தவர்கள். அப்படியென்றால் ஏன் இவர்கள் எதிராக இறங்கி இருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் பிரச்சினை தொடர்பில் தேடிப்பா்க்க வேண்டும். ஒருவருடத்துக்கு முன்னர் அரசாங்கத்துக்கு இருந்த மக்கள் விருப்பம் தற்போது இருக்கிறதா அரசாங்கம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

வாழ்வதற்கு முடியாதவு செலவு அதிகரித்த நாடுகளில் தெற்காசியாவில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. அரசாங்கம் நல்ல முறையில் செயற்பட்டிருந்தால், இந்த நிலை ஏற்படப்போவதில்லை.எமது ஆட்சியில் எங்களுக்கு முலாவது எதிர்ப்பு வந்தது.

கூட்டுறவு சங்க தேர்தலிலாகும். அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடத்தில் இடம்பெற்ற பெரும்பாலான கூட்டுறவு சங்க தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. இது அரசாங்கத்துக்கு நல்லதில்லை. அதனால் அரசாங்கம் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க தவறினால், எமது அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என்பதை அரசாங்கத்துக்கு தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்