மக்களின் உரிமையை நோக்கிச்சென்ற இலங்கை தமிழரசுக்கட்சி இப்போது பதவிக்கும் கதிரைக்கு போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றது – கந்தசாமி பிரபு

தமிழ் மக்களின் உரிமையை நோக்கிச்சென்ற இலங்கை தமிழரசுக்கட்சியானது இன்று பதவியாசைக்கும் கதிரைப்போட்டிக்குமான கட்சியாக மாறியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

இன்று(29.01.2026) களுவாஞ்சிகுடியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற குழத்தலைவர் சிறிதரனுக்கு எதிராக தங்களது கட்சிக்குள்ளே குழப்ப நிலையினை ஏற்படுத்திக் கொண்டு அவரை அரசியலமைப்பிலிருந்து விலகவேண்டும் என்ற விடயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் பதவியிலிருந்தும் அவரை விலக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களின் உட்கட்சி பூசல் என்பது தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதை கேள்விக்குறியாக்கியுள்ளது. இவர்களுக்கு பின்னர் தமிழ் மக்கள் அணிதிரள்வார்களா என்ற சந்தேகம் இன்று எழுந்துள்ளது.

மேலும், ஏனைய கட்சிகள் தங்களுக்குள் இருக்கின்ற முரண்பாடுகளை மறந்து ஒன்றுபடும் போது தமிழரசுக்கட்சியானது அடிப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலைமையை காணக்கூடியதாகவுள்ளது.

இன்று வடகிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு தளம் அதிகரித்து வருகின்றது.

தற்போது, வடமாகாண மக்கள் தேசிய மக்கள் சக்தியையும் ஜனாதிபதினையும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். இந்த நாட்டிலே ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தவேண்டும் என அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்துள்ளனர்.

இன மத வேறுபாடுகள் கடந்து தேசிய மக்கள் சக்தியுடன் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், புதிய அரசியலமைப்பு தொடர்பாக தேர்தல் காலங்களில் வாக்குறுதியொன்றினை வழங்கியிருந்தோம்.

இது தொடர்பான முன்னெடுப்புகளையும் அரசாங்கம் முன்னெடுத்தது. ஆனால் டிட்வா புயல் இந்த நாட்டில் ஏற்படுத்திய அழிவுகள் காரணமாக நாடு பின்தங்கிய நிலையினை அடைந்துள்ளது. அதிலிருந்து நாட்டை மீளகட்டியெழுப்பும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

விரைவில் புதிய அரசியலமைப்பு மற்றும் மாகாணசபை தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு