பேரழிவிலிருந்து பீனிக்ஸ் பறவையாய் நாடு மீண்டு வரும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

யாரும் எதிர்பாரா அளவிலான சேதத்தை எமது தேசத்திலே இந்தப் புயல் ஏஏற்படுத்தியுள்ளது. உறக்கத்திலிருந்தவர்கள் கண் விழிக்காமலேயே உயிரிழந்த சோகம் மிகப் பெரிது. நான் இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு நேரில் சென்று மக்களைச் சந்தித்த போது அவர்களின் நிலைமை மிக வேதனையளித்தது எனபெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்றைய தினம்(05) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்திருக்கின்றார்.

அரசாங்கம், பொலிசார், முப்படையினர் என சகல விதமானவர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமது உயிரைப் பணயம் வைத்து சேவையாற்றிக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். அத்தோடு வெளிநாடுகள், உள்நாடு ஆகியவற்றிலிருந்து எமக்குக் கிடைத்துவரும் நிவாரண உதவிகள் மிகப்பெரிது.

என்ன முரண்பாடுகள் இருந்தாலும் அனர்த்த வேளைகளில் சக மனிதனைக் காப்பாற்ற உதவும் மனித நேயமிக்க மனிதர்கள் எம் நாட்டில் நிறைந்து காணப்படுகின்றார்கள். இன, மொழி பேதமின்றி அனைத்து மக்களும் ஒன்று திரண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிற்பது பெருமை கொள்ளத்தக்க ஒரு விடயமாகும்.

வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாகவுள்ள மலையகப் பகுதிகளிலே வசிக்கும் எமது எமது உறவுகள் இருக்கின்றார்கள். மலையகத்தைப் பொறுத்தவரை ஒரு வீட்டிலே இரண்டு மூன்று குடும்பங்கள் வசிக்கின்றார்கள். கடந்த காலங்களிலே அனர்த்தம் வருகின்றது என அறிவித்தாலும் கூட அங்கே வசிக்கின்ற மக்களுக்கு இடம்பெயர்ந்து வாழ வேறு இடங்கள் கிடையாது.
காலநிலை மாற்றங்களின் போது பாதுகாப்பான இடங்களில் சென்று தங்குங்கள் என அறிவிக்கப்படுகின்றது.

நாங்கள் எங்கே தங்குவது? என மக்கள் கேட்கிறார்கள். அனர்த்தங்கள் வரும்போது அவர்களை தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கின்றனர் பின்னர் திரும்பவும் தமது பாதுகாப்பற்ற வாழிடங்களுக்கு அவர்கள் செல்கின்றார்கள். இந்த நிலை மாறி மக்களுக்கு பாதுகாப்பான இடங்களை அரசாங்கம் வீடுகள் அல்லது காணிகளை வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கும் என மேலும் தெரிவித்த அவர், எமது மக்களுக்கு மிக அத்தியாவசியமானது நிலம். எனவே தோட்டங்களில் இருக்கின்ற பாதுகாப்பான நிலங்களை வழங்கவேண்டியது மிக முக்கியமான விடயமாகும்.

அதே வேளை இந்தப் பேரனர்த்தத்தினால் இறந்து கிடக்கின்ற மக்களின் சடலங்களுக்கு மேலேறி எதிர்க்கட்சி அரசியல் செய்கின்றது. நிலைகுலைந்து போயுள்ள நாட்டை மீடெடுக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு கரம் கொடுத்து இணைந்து செல்லாமல் மக்களுக்குக் கிடைக்கின்ற நலன்களை அவர்கள் கெடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். யாரென்ன நினைத்தாலும் யாரென்ன செய்தாலும் பீனிக்ஸ் பறவை போல எமது நாடு குறுகிய காலத்துக்குள் மீண்டு வரும்.

எங்களின் அமைச்சின் ஊடாக நாம் பல்வேறு பட்ட அபிவிருத்திகளை நாம் மேற்கொண்டிருக்கின்றோம். அடுத்த வருடத்துக்கான வீட்டுத்திட்டம் முதலான பல்வேறு உட்கட்டமைப்புச் செயற் திட்டங்களை மேற்கொள்வதற்குக் காத்துக்கொண்டிருக்கின்றோம் என அவர் தனது உரையில் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

By C.G.Prashanthan

sanakkiyan

நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் பொறிமுறை வேண்டும் – சாணக்கியன்

December 6, 2025

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க

irsd

சீரற்ற வானிலை; வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்குக் கால அவகாசம்

December 6, 2025

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான

kajen

யாழ் மாவட்ட நிதி ஒதுக்கீடு: சந்தேகங்களை அரசு தீர்க்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

December 6, 2025

இயற்கை அனர்த்த பாதிப்புகளின் போது அந்த பாதிப்புகளை குறைப்பதுவே அரசாங்கத்தின் பொறுப்பாகும். பல வாரங்களுக்கு முன்னரே பாதிப்பு வரும் என்று

mora

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிக்கின்றது!

December 6, 2025

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது மிக அதிகமாக இருப்பதாகவும், அதன் சேமிப்புக் கொள்ளளவில் 97.87 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் பொலன்னறுவையில் உள்ள

glob

நாட்டைக் கட்டியெழுப்ப ஒற்றுமையுடன் கைகோருங்கள் – அனைத்துலகத் தமிழர் பேரவை

December 6, 2025

பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு, உலகத் தமிழர் சமூகத்தின் ஒருங்கிணைந்த மனிதாபிமான உதவிகள் இன்றியமையாதவையாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலகத் தமிழர் பேரவை, உலகம்

iya

அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு – சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் – காவிந்த ஜயவர்தன

December 6, 2025

இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த

Harini-Amarasuriya

பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை!

December 6, 2025

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த வயதெல்லை உள்ளிட்ட விடயங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அரச

tha

மண்சரிவால் தாயை பிரிந்த 3 மாத குழந்தை

December 6, 2025

மீமுரேவில் ஏற்பட்ட மண்சரிவினால் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட 3 மாத குழந்தையை இராணுவத்தினர் தாயாரிடம் ஒப்படைத்தனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(5)

bam

பம்பலப்பிட்டியில் விபத்து : 5 பேர் காயம்

December 6, 2025

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

mal

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் மாலைதீவினால் நன்கொடை

December 6, 2025

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாலைதீவினால்

ifj_1

அவசரகாலச்சட்ட ம் தொடர்பான பிரதியமைச்சர் கருத்துக்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவை கண்டனம்!

December 6, 2025

ஜனாதிபதியை விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலச்சட்ட விதிகள் பிரயோகிக்கப்படும் என்ற பிரதியமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்து தொடர்பில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும்

photo-collage.png (2)

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின்: பால்நிலை அடிப்படையிலான வன்முறை பற்றிய விழிப்புணர்வு

December 6, 2025

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) அதன் பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து 16 நாட்கள் செயற்பாட்டு திட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில்