பேரழிவிலிருந்து பீனிக்ஸ் பறவையாய் நாடு மீண்டு வரும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

யாரும் எதிர்பாரா அளவிலான சேதத்தை எமது தேசத்திலே இந்தப் புயல் ஏஏற்படுத்தியுள்ளது. உறக்கத்திலிருந்தவர்கள் கண் விழிக்காமலேயே உயிரிழந்த சோகம் மிகப் பெரிது. நான் இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு நேரில் சென்று மக்களைச் சந்தித்த போது அவர்களின் நிலைமை மிக வேதனையளித்தது எனபெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்றைய தினம்(05) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்திருக்கின்றார்.

அரசாங்கம், பொலிசார், முப்படையினர் என சகல விதமானவர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமது உயிரைப் பணயம் வைத்து சேவையாற்றிக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். அத்தோடு வெளிநாடுகள், உள்நாடு ஆகியவற்றிலிருந்து எமக்குக் கிடைத்துவரும் நிவாரண உதவிகள் மிகப்பெரிது.

என்ன முரண்பாடுகள் இருந்தாலும் அனர்த்த வேளைகளில் சக மனிதனைக் காப்பாற்ற உதவும் மனித நேயமிக்க மனிதர்கள் எம் நாட்டில் நிறைந்து காணப்படுகின்றார்கள். இன, மொழி பேதமின்றி அனைத்து மக்களும் ஒன்று திரண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிற்பது பெருமை கொள்ளத்தக்க ஒரு விடயமாகும்.

வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாகவுள்ள மலையகப் பகுதிகளிலே வசிக்கும் எமது எமது உறவுகள் இருக்கின்றார்கள். மலையகத்தைப் பொறுத்தவரை ஒரு வீட்டிலே இரண்டு மூன்று குடும்பங்கள் வசிக்கின்றார்கள். கடந்த காலங்களிலே அனர்த்தம் வருகின்றது என அறிவித்தாலும் கூட அங்கே வசிக்கின்ற மக்களுக்கு இடம்பெயர்ந்து வாழ வேறு இடங்கள் கிடையாது.
காலநிலை மாற்றங்களின் போது பாதுகாப்பான இடங்களில் சென்று தங்குங்கள் என அறிவிக்கப்படுகின்றது.

நாங்கள் எங்கே தங்குவது? என மக்கள் கேட்கிறார்கள். அனர்த்தங்கள் வரும்போது அவர்களை தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கின்றனர் பின்னர் திரும்பவும் தமது பாதுகாப்பற்ற வாழிடங்களுக்கு அவர்கள் செல்கின்றார்கள். இந்த நிலை மாறி மக்களுக்கு பாதுகாப்பான இடங்களை அரசாங்கம் வீடுகள் அல்லது காணிகளை வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கும் என மேலும் தெரிவித்த அவர், எமது மக்களுக்கு மிக அத்தியாவசியமானது நிலம். எனவே தோட்டங்களில் இருக்கின்ற பாதுகாப்பான நிலங்களை வழங்கவேண்டியது மிக முக்கியமான விடயமாகும்.

அதே வேளை இந்தப் பேரனர்த்தத்தினால் இறந்து கிடக்கின்ற மக்களின் சடலங்களுக்கு மேலேறி எதிர்க்கட்சி அரசியல் செய்கின்றது. நிலைகுலைந்து போயுள்ள நாட்டை மீடெடுக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு கரம் கொடுத்து இணைந்து செல்லாமல் மக்களுக்குக் கிடைக்கின்ற நலன்களை அவர்கள் கெடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். யாரென்ன நினைத்தாலும் யாரென்ன செய்தாலும் பீனிக்ஸ் பறவை போல எமது நாடு குறுகிய காலத்துக்குள் மீண்டு வரும்.

எங்களின் அமைச்சின் ஊடாக நாம் பல்வேறு பட்ட அபிவிருத்திகளை நாம் மேற்கொண்டிருக்கின்றோம். அடுத்த வருடத்துக்கான வீட்டுத்திட்டம் முதலான பல்வேறு உட்கட்டமைப்புச் செயற் திட்டங்களை மேற்கொள்வதற்குக் காத்துக்கொண்டிருக்கின்றோம் என அவர் தனது உரையில் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

By C.G.Prashanthan

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்