பெற்றோலிய உற்பத்திகளின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக கொலன்னாவை முனையத்தில் தற்போது 30 மற்றும் 31 ஆம் இலக்க எரிபொருள் களஞ்சியத்தின் புதிய தாங்கி மூலம் புனரமைக்க வேண்டிய தேவையைக் கருத்தில் கொண்டு, குறித்த பணிகளுக்கு இலங்கை பெற்றோலிய மொத்தக் களஞ்சிய முனையக் கம்பனியின் நிதியைப் பயன்படுத்தி பெறுகைச் செயன்முறையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன மொத்தக் களஞ்சிய முனைய கம்பனியால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தக் கூடிய வகையில் குறைந்தது 45 நாட்களுக்குப் போதுமான பெற்றோலிய உற்பத்தித் தொகையைப் பேணிச் செல்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த தேவையைப் பூர்த்தி செய்வதற்காக குறித்த கம்பனியின் கொலன்னாவ முனையத்தில் 64,000 கனமீற்றர் கொள்ளளவுடன் கூடிய புதிய 06 தாங்கிகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், முத்துராஜவெல முனையத்தில் 40,000 கனமீற்றர் கொள்ளளவுடைய 03 தாங்கிகளை நிர்மாணிப்பதற்கான பெறுகை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொலன்னாவை முனையத்தில் தற்போது 30 மற்றும்31 ஆம்இலக்க தாங்கிகள் முறையே 7,000 கனமீற்றர் மற்றும் 15,000 கனமீற்றர் கொள்ளவுடன் கூடிய புதிய தாங்கிககள் மூலம் புனரமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, பெற்றோலிய உற்பத்திகளின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக 30 மற்றும் 31 ஆம் இலக்க எரிபொருள் களஞ்சியத்தின் புதிய தாங்கி மூலம் புனரமைக்க வேண்டிய தேவையைக் கருத்தில் கொண்டு, குறித்த பணிகளுக்கு இலங்கை பெற்றோலிய மொத்தக் களஞ்சிய முனையக் கம்பனியின் நிதியைப் பயன்படுத்தி பெறுகைச் செயன்முறையை நடைமுறைப்படுத்துவதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.