பெறுமதி சேர் வரி; பாதிப்படைய போகும் வாடிக்கையாளர்கள்

பெறுமதி சேர் வரி செலுத்தும் வருவாயின் எல்லையை 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் குறைத்துள்ளதால் மறைமுகமாக பொருட்கள் சேவைகளின் விலை அதிகரிக்க கூடுமென பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு உரையில் ஜனாதிபதி வரி தொடர்பான தொழில்நுட்ப சொற்களை பயன்படுத்தாததால் வரி அறவீடு தொடர்பில் முழு உரையையும் கேட்பதன் ஊடாகவே அறிந்து கொள்ள முடியும்.

ஆனால் வரி அறவீட்டின் போது ஏற்படும் பாதக நிலைமைகள் கண்ணுக்கு தென்படாத தன்மையை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பில் விளக்கமளித்துள்ள நிபுணர்கள்,

வர்த்தக நடவடிக்கையின் போது VAT 18 % -SSCL 2.5 % பதிவு செய்வதற்கான வருடாந்த புரள்வு எல்லை ரூபா. 60 மில்லியனிலிருந்து ரூபா. 36 மில்லியன் வரை குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு வருடத்திற்கு 60 மில்லியன் ரூபா விற்பனை செயற்பாடுகள் இருந்தால் அதாவது ஒரு நாளைக்கு 160,000 ரூபா புரள்வு இருந்தாலே வரி பதிவு செய்ய வேண்டும். அது இப்போது 36 மில்லியன் குறைக்கப்பட்டுள்ளதால் ஒரு நாளைக்கு 100,000 ரூபா புரள்வு இருந்தால் VAT 18 % -SSCL 2.5 % பதிவு செய்ய வேண்டும்.

அதனால் வரி பதிவாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும். இதற்கு முன்னர் வற் வரி மற்றும் SSCL பதிவு இல்லாமல் வர்த்தகம் செய்தவர்களும் இப்போது பதிவுக்கு உள்வாங்கப்படுவார்கள்.

குறைந்த செலவில் பொருட்களை வழங்கியவர்களும் வரி செலுத்தும் வகுதிக்குள் உள்வாங்கப்படுவதால் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

உதாரணத்திற்கு சூப்பர் மார்க்கட் ஒன்றில் ஏனைய வர்த்தக நிலையங்களை விட குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வந்திருக்க கூடும்.அதாவது ஒரு நாளைக்கு 100,000 ரூபா புரள்வு இருந்ததாலும் VAT -SSCL செலுத்தாததால் குறைந்த விலையில் விற்பனை செய்திருக்க கூடும்.

ஆனால் இப்போது ஒரு நாளைக்கான புரள்வு குறைக்கப்பட்டுள்ளதாலும் வரி செலுத்தும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால் குறைந்த விலையில் பொருட்களை வழங்க முடியாமல் போகலாம்.

நாம் அறியாத வகையில் சில வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.வரிகளை வர்த்தகர்கள் செலுத்தினாலும் அவர்கள் அதை வாடிக்கையாளர்களிடமிருந்து அறவிட்டுக் கொள்கின்றனர்.

அந்த வரிக்கான புரள்வு குறைக்கப்பட்டமை உள்ளுர் உற்பத்தி பொருட்களின் விலைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்ததாலும். அதாவது சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பாதிக்கப்பட கூடும்.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த