பெருந்தோட்ட மக்களின் சம்பளம்; இதுவரை காலமும் அரசியல் பேசுபொருளாகவே பயன்படுத்தப்பட்டது – உபாலி பன்னிலகே

பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் இதுவரை காலமும் அரசியல் பேசுபொருளாகவே பயன்படுத்தப்பட்டது. எவ்வித போராட்டங்களுமில்லாம் பெருந்தோட்ட மக்களுக்குரிய சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை அவர்களின் நாளாந்த சம்பளத்துடன் மாத்திரம் வரையறுக்க முடியாது. அந்த மக்களின் ஏனைய அடிப்படை பிரச்சினைகள், உட்கட்டமைப்பு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

வரவு – செலவுத் திட்டத்தின் பிரதான நோக்கம் என்னவென்பதை எதிர்க்கட்சிகளுக்கு எடுத்துரைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதையிட்டு கவலையடைகிறேன்.

வரவு – செலவு விவாதத்திலும் குறுகிய அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்திய குற்றச்சாட்டுக்களை மாத்திரமே எதிர்க்கட்சியினர் முன்வைக்கின்றனர்.

அடிமட்ட மக்களின் நலனை கருத்திற் கொண்டு ஜனாதிபதி வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவில்லை என்று குறிப்பிட்டார்கள். இவர்களின் ஆட்சிக்காலத்தில் 78 வரவு – செலவுத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

நடுத்தர மக்களை இலக்காகக் கொண்டு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தால் மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றமடைந்திருக்கும், நாடும் அபிவிருத்தியடைந்திருக்கும்.

போலியான தற்காலிக நிவாரணமளித்து மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. நிலையான பொருளாதார இலக்கை அடிப்படையாகக் கொண்டு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பேரண்ட பொருளாதார கொள்கைகளை அடைவதற்காக 6 திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதை காட்டிலும் அவர்களை தொழிற்றுறையில் முன்னேற்றுவதற்கும் உரிய திட்டங்கள் அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சமூக பாதுகாப்பு அறவீட்டுத்தொகை மற்றும் நிவாரணங்களை நியாயமான முறையில் வழங்குவற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் அரசியல் பேசுபொருளாகவே பயன்படுத்தப்பட்டது. எவ்வித போராட்டங்களுமில்லாம் பெருந்தோட்ட மக்களுக்குரிய சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை அவர்களின் நாளாந்த சம்பளத்துடன் மாத்திரம் வரையறுக்க முடியாது. அந்த மக்களின் ஏனைய அடிப்படை பிரச்சினைகள், உட்கட்டமைப்பு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகவே நாங்கள் எந்த தரப்பினரையும் புறக்கணிக்கவில்லை.

இந்த வரவு – செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் சிறந்த முறையில் செயற்படுத்தப்படும். அரசமுறை கடன்களை முறையாக செலுத்தும் வகையில் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வோம் என்றார்.

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்

Tamil_News_lrg_432121120260912210533

லண்டன் கார் பந்தயம்: விபத்தைத் தாண்டி 3-வது இடத்தைப் பிடித்து நடிகர் அஜித் சாதனை!

September 13, 2026

லண்டன்: லண்டனில் முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்த புகழ்பெற்ற ‘லீ மான்ஸ் கப்’ (Le Mans Cup) கார்

images - 2026-09-13T133956.877

“வார்த்தைகளை அளந்து பேசுவது அரசியல்வாதிகளின் கடமை!” – அவதூறு பேச்சுகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கண்டனம்

September 13, 2026

சென்னை: அரசியல் விமர்சனம் என்ற பெயரில் ஆபாசமாகப் பேசுவதும் மிரட்டல் விடுப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது

36a6a19c6587d011b2834d714207e935

“லீடர்னா என்னன்னே தெரியாம பேசுறது ஏமாத்து வேலை!” – பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேச்சு; முதலமைச்சருடன் ஒப்பிட்டுப் பரவும் சர்ச்சை!

September 13, 2026

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு (Leadership) குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி

26-6aa59dd45056b

லண்டன் கார் பந்தயத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த த்ரிஷா!

September 13, 2026

லண்டன்: இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தொடங்கி

ba4598f0-5b62-11ee-8789-13750be9e58d.jpg

“நாவைக் காக்க வேண்டும்”: திமுகவினரின் அநாகரிகப் பேச்சுக்குத் திருக்குறள் வழியே கனிமொழி கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய நிலையில், அவர்களுக்கு அறிவுரை

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“ஆ.ராசா மற்றும் சேகர்பாபுவின் பேச்சுகள் திமுகவின் வன்மத்தைக் காட்டுகிறது” – அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; ஆவணங்கள் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

September 13, 2026

துரை: அவசரநிலையின் போது மிசா சட்டத்தின் (MISA) கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காகவே அவர்

b36f3954a794f9382daecd17359724952bb8ee0389728dfd9ea790750de3a7a2

“இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்!” – ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

September 13, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நாக்கு

eft9J2c8vpDNB_Wg

தாராபுரம் இடைத்தேர்தல்: எனக்காக முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் – தவெக வேட்பாளர் சத்தியபாமா தகவல்!

September 13, 2026

தாராபுரம் / சென்னை: நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும்,

768-512-25775621-thumbnail-16x9-madurai-malli

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனை!

September 13, 2026

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை