பெருந்தோட்டத்துறையை மேம்படுத்த சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பைப் பெறுவது தொடர்பில் கவனம்?

விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறையை மேம்படுத்துவதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

கடந்த 24 மற்றும் 26ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் கூடிய குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவில், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு ஆகியவற்றின் கீழ் உள்ள அரசாங்க நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள், செயலாற்று அறிக்கைகள் குறித்து ஆராயும்போதே குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் விவசாயம் மற்றும் கால்நடைத் துறையின் வளர்ச்சிக்கு வெளிநாடுகளில் உள்ள பல நிபுணர்கள் பங்களிக்கத் தயாராக இருப்பதாகவும், அத்தகைய நபர்களின் ஆதரவைப் பெறுவதன் மூலம் இந்தத் துறையை மேம்படுத்துவதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குழுவின் தலைவர் குறிப்பிட்டார். விவசாயத் துறையில் அபிவிருத்தியை மேற்கொள்ளும் போது ஏற்படும் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் குழு தலையீடு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

விவசாய அமைச்சின் கீழ் உள்ள பல நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் செயலாற்று அறிக்கைகள் குறித்து குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, பெருந்தோட்டத் துறையில் தேயிலை மற்றும் இறப்பர் பயிர்கள் குறித்து ஆராய்ச்சி நடத்த வேண்டியதன் அவசியத்தை குழுவின் தலைவர் வலியுறுத்தியதுடன், இதற்காக வெளிநாட்டு நிபுணர்களின் உதவியைப் பெறமுடியும் என்றும் தெரிவித்தார். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் செயலாற்று அறிக்கைகளும் இங்கு ஆராயப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரொஷான் அக்மீமன, கிட்ணன் செல்வராஜ், சித்ரால் பெர்னாந்து, ஞானமுத்து ஸ்ரீநேசன், கிங்ஸ் நெல்சன் மற்றும் அரச அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.