பெங்களூரு, மும்பை உட்பட 10 நகரங்களில் 13 வயதிலேயே போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்

டில்லி எய்ம்ஸ் மருத்துவ ஆய்வு நிறுவனம் பெங்களூரு, மும்பை உட்பட 10 நகரங்களில் நடத்திய ஆய்வில், பள்ளி செல்லும் மாணவர்கள் 13 வயது முதலே புகை மற்றும் மது உள்ளிட்ட போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகி வருவதாக எச்சரித்துள்ளது.

டில்லி எய்ம்சின், போதைக்கு அடிமையானவர்களுக்கான தேசிய சிகிச்சை மையத்தைச் சேர்ந்த டாக்டர் அஞ்சு தவான் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. டில்லி, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், உள்ளிட்ட 10 நகரங்களின் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் எட்டு முதல் பிளஸ் 2 வரையிலான 5,920 மாணவர்களிடம், 2018 மே முதல் 2019 ஜூன் வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இருப்பினும் ‘நேஷனல் மெடிக்கல் ஜர்னல் ஆப் இந்தியா’ இதழில் தற்போது தான் அந்த ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: உயர் வகுப்புகளுக்கு செல்ல செல்ல போதைப்பொருள் பயன்பாடு அதிகரிக்கிறது. எட்டாம் வகுப்பைவிட பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தும் வாய்ப்பு இரு மடங்கு அதிகமாக உள்ளது.

பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் அறிமுகமாகும் ஆரம்ப சராசரி வயது, 13 ஆக உள்ளது. ரசாயனத்தை சுவாசித்து போதை அனுபவிப்பவர்கள் ஆரம்ப வயது, 11; ஹெராயின் பயன்படுத்தும் மாணவர்களின் ஆரம்ப வயது 12; போதை மாத்திரை பயன்படுத்து பவர்களின் ஆரம்ப வயது 12.5 ஆக உள்ளது.

எளிதாக கிடைக்கும் போதைப்பொருட்கள் குறித்து மாணவர்களிடம் நடத்திய ஆய்வில், 46.3 சதவீத பேர் புகையிலை, 36.5 சதவீதம் பேர் மது, 21.9 சதவீதம் பேர் பாங் எனப்படும் மது வகை, 16.1 சதவீதம் பேர் கஞ்சா, 15.2 சதவீதம் பேர் சுவாசிக்கும் போதை வஸ்துகள் எளிதாகக் கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது.

மாணவியரை விட மாணவர்களிடம் போதைப்பொருள் பயன்பாடு அதிகம் உள்ளது. ஆய்வில் பங்கேற்ற மாணவர்களில் 40 சதவீத பேர், தங்கள் குடும்பத்தில் புகையிலை அல்லது மது பயன்படுத்தும் உறுப்பினர் உள்ளதாக கூறினர். 95 சதவீத மாணவர்கள் ‘போதைப்பொருள் தீங்கு விளைவிக்கும்’ என ஒப்புக்கொள்கின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்