புலி ஆதரவாளர்களால் கொலை அச்சுறுத்தல் எனக்கும் என் குடும்பத்துக்கும் விடுக்கப்பட்டது – அருண் சித்தார்த்

சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளருமான அருண் சித்தார்த் தனக்கும் தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் புலி ஆதரவாளர்களால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இன்று அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் 12/11/2025 இரவு சுமார் 10:40 மணியளவில் தனது கட்சி அலுவலகம் மற்றும் வீடு அமைத்துள்ள 238 கே. கே. எஸ் வீதி தாவடி எனும் முகவரிக்கு இரண்டு வாகனங்களில் வந்த இனத்தெரியாத நபர்கள் தமது அலுவலகம் மற்றும் வீட்டைக் கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்ததுடன் வீட்டு வாசலில் நின்ற தனது மனைவி மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்களை ஆபாசமாத் தூற்றியதுடன் நீங்கள் தேசத் துரோகிகள், குடும்பமாக கொல்லப்படுவீர்கள் என மிரட்டியதாக அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அருண் சித்தார்த் மற்றும் அவரது மனைவி துணுக்காயில் புலிகளால் நடத்தப்பட்ட சித்திரவதை முகாம் இருந்த இடத்துக்குச் சென்று அங்கு வைத்து புலிகளால் கொல்லப்பட்ட தமது குடும்ப உறுப்பினர்கள் குறித்து ஊடகங்களில் பேசி இருந்தனர். புலிகளின் துணுக்காய் சித்திரவதை முகாம் குறித்துப் பேசிய பின்னரே தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களில் இருந்து தொடர்ச்சியாக மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். துணுக்காயில் சுமார் 3000 இற்கும் மேற்பட்ட தமிழர்களைப் மாற்று இயக்கங்களுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள் எனக் குற்றஞ்சாட்டிப் புலிகள் சித்திரவதைக்குட்படுத்திப் படுகொலை செய்ததை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியதும் அது தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்ததுமே தம் மீதான மரண அச்சுறுத்தல்களுக்கு காரணம் என அவர் தெரிவித்தார்.

இந்த NPP அரசாங்கம் தமது தேர்தல் வெற்றிக்காக புலிகளையும் அவர்களது எச்ச சொச்சங்களையும் ஆதரிப்பதால் புலிகள் மீண்டும் தமது ஜனநாயக விரோத கொலைக் கலாசாரத்தை கையிலெடுக்க முயற்சிப்பதாக அவர் அரசாங்கத்தைக் குற்றஞ் சாட்டினார்.

By C.G.Prashanthan

gajen

திருமலை விவகாரம்: உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

November 17, 2025

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை என

chan

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரத்தில் சஜித் தலையிட்டால் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

November 17, 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 வழங்குவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும்

Silai

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த

putht

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்

gg

சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

November 17, 2025

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும்

kon

சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி

November 17, 2025

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய

she

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

November 17, 2025

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி

ukra

 உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யாவுடன் பேச்சு

November 17, 2025

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் போர் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் துவங்குவது குறித்து தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாக உக்ரைன்

sau

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

November 17, 2025

சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

kodda

பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்

November 17, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (17.11.2025) காலை

pu

திருமலையில் மீண்டும் பதற்றம்; பொலிஸ் பாதுகாப்போடு அதே புத்தர் சிலை

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முயற்சிக்கும் நிலை தொடர்வதால் குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே

nama

மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை – நாமல் ராஜபக்ஷ

November 17, 2025

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் 21 ஆம்