புலி ஆதரவாளர்களால் கொலை அச்சுறுத்தல் எனக்கும் என் குடும்பத்துக்கும் விடுக்கப்பட்டது – அருண் சித்தார்த்

சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளருமான அருண் சித்தார்த் தனக்கும் தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் புலி ஆதரவாளர்களால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இன்று அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் 12/11/2025 இரவு சுமார் 10:40 மணியளவில் தனது கட்சி அலுவலகம் மற்றும் வீடு அமைத்துள்ள 238 கே. கே. எஸ் வீதி தாவடி எனும் முகவரிக்கு இரண்டு வாகனங்களில் வந்த இனத்தெரியாத நபர்கள் தமது அலுவலகம் மற்றும் வீட்டைக் கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்ததுடன் வீட்டு வாசலில் நின்ற தனது மனைவி மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்களை ஆபாசமாத் தூற்றியதுடன் நீங்கள் தேசத் துரோகிகள், குடும்பமாக கொல்லப்படுவீர்கள் என மிரட்டியதாக அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அருண் சித்தார்த் மற்றும் அவரது மனைவி துணுக்காயில் புலிகளால் நடத்தப்பட்ட சித்திரவதை முகாம் இருந்த இடத்துக்குச் சென்று அங்கு வைத்து புலிகளால் கொல்லப்பட்ட தமது குடும்ப உறுப்பினர்கள் குறித்து ஊடகங்களில் பேசி இருந்தனர். புலிகளின் துணுக்காய் சித்திரவதை முகாம் குறித்துப் பேசிய பின்னரே தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களில் இருந்து தொடர்ச்சியாக மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். துணுக்காயில் சுமார் 3000 இற்கும் மேற்பட்ட தமிழர்களைப் மாற்று இயக்கங்களுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள் எனக் குற்றஞ்சாட்டிப் புலிகள் சித்திரவதைக்குட்படுத்திப் படுகொலை செய்ததை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியதும் அது தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்ததுமே தம் மீதான மரண அச்சுறுத்தல்களுக்கு காரணம் என அவர் தெரிவித்தார்.

இந்த NPP அரசாங்கம் தமது தேர்தல் வெற்றிக்காக புலிகளையும் அவர்களது எச்ச சொச்சங்களையும் ஆதரிப்பதால் புலிகள் மீண்டும் தமது ஜனநாயக விரோத கொலைக் கலாசாரத்தை கையிலெடுக்க முயற்சிப்பதாக அவர் அரசாங்கத்தைக் குற்றஞ் சாட்டினார்.

By C.G.Prashanthan

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்