புலிகளுக்கு நிதி வழங்கிய மஹிந்த: போர் இரகசியங்களை அம்பலப்படுத்தும் பொன்சேகா!

” 2005 இல் புலிகளுக்கு நிதி வழங்கியமை மற்றும் 2009 இல் வழங்கப்பட்ட 48 மணிநேர போர் நிறுத்தம் உள்ளிட்ட தேசத்துரோக செயல்களுக்கு மஹிந்த ராஜபக்ச பொறுப்பு கூறி ஆக வேண்டும்.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (11) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

” 2005 ஜனாதிபதி தேர்தலில் வெல்வதற்காக மஹிந்த ராஜபக்ச புலிகளுக்கு நிதி வழங்கினார் என்ற விடயம் 2010 ஆம் ஆண்டிலேயே வெளிப்படுத்தப்பட்டது. எனினும், இது பற்றி எனக்கு 2008 ஆம் ஆண்டிலேயே தெரியவந்தது. பஸில் ராஜபக்சவுடன் நடந்த சந்திப்பொன்றின்போது அது பற்றி அவர் என்னிடம் தெரிவித்திருந்தார்.

புலிகளுக்கு இவ்வாறு 2 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டது தேசத்துரோக செயல் இல்லையா? இந்த பணத்தை பயன்படுத்தியே கடற்புலிகளுக்கு படகுகள் வாங்கப்பட்டன. அவற்றை பயன்படுத்தியே 4 ஆம் கட்ட ஈழப்போரின்போது தாக்குதல் நடத்தப்பட்டது. எமது கடற்படையின் 10 கப்பல்கள்வரை அழிக்கப்பட்டன.

கடற்படையினரும் உயிரிழந்தனர். எமது கடற்படையினருக்கு மஹிந்த ராஜபக்ச இழைத்த துரோகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.” எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

அதேபோல 2009 இல் 48 மணிநேர போர் நிறுத்தத்தை மஹிந்த வழங்கினார்.

இதனால் படையினருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மார்ச் மாதம் முடியவிருந்த போர் மே மாதம் வரை நீடித்தது. ஆயுத இழப்பும் ஏற்பட்டது. இதற்கும் மஹிந்த ராஜபக்ச பொறுப்பு கூறவேண்டும்.” – எனவும் பொன்சேகா வலியுறுத்தினார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்