புன்னைச்சோலையில் நிவாரணம் வழங்கவும் கிராம உத்தியோகத்தரை இடமாற்றவும் கோரிப் போராட்டம்!

மட்டக்களப்பு, புன்னைச்சோலை கிராம சேவகர் பிரிவில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும், கிராம உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யக்கோரியும் பொதுமக்கள் நேற்று (15) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, குறித்த கோரிக்கைகள் மற்றும் பாதிப்பின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் புன்னைச்சோலை கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நிவாரணமோ அல்லது நிதியுதவியோ வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி, பாதிக்கப்பட்ட மக்கள் புன்னைச்சோலை பகுதியில் ஒன்று திரண்டனர்.

நூற்றுக்கணக்கான பெண்கள் ஒன்றுகூடி, கிராம உத்தியோகத்தரை இடமாற்றுமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் கோரி ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்தனர். இப்பேரணியானது மாமாங்கம் ஆலய வீதி, பார் வீதி, அரசடி சுற்றுவட்டம் மற்றும் நகர் மணிக்கூட்டுக் கோபுரம் வழியாகச் சென்று இறுதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அடைந்து முற்றுகையிட்டது.

இவ்விடத்திற்கு விஜயம் செய்த தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார். கிராம உத்தியோகத்தர் தொடர்பான புகார்கள் குறித்தும், நிவாரணம் தொடர்பாகவும் தீர்க்கமான விசாரணை செய்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அவர் வாக்குறுதி அளித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் க. பிரபு,

“தாம் பாதிக்கப்பட்டபோது கிராம உத்தியோகத்தர் தங்களைப் பார்வையிடவில்லை எனவும், அதனால் வெள்ள நிவாரணம் மற்றும் அரசாங்கக் கொடுப்பனவுகள் தமக்குச் சரியாகக் கிடைக்கவில்லை எனவும் மக்கள் முறையிட்டனர். எனவே, அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்போம். நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும், பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் குறித்தும் பரிசீலனை செய்து உரியவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வெகு விரைவில் ஏற்பாடு செய்வோம்” என தெரிவித்தார்.

மேலும், கிராம உத்தியோகத்தர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு, அவரது செயல்பாடு தவறாக இருக்கும் பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளதை நாங்கள் அவதானித்துள்ளோம். கடந்த காலத்தில் மக்களின் நிதியை வீணடித்தவர்கள் மற்றும் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளுடன் தொடர்புடையவர்கள் மக்களைத் தூண்டிவிட்டு இதுபோன்ற விஷமத்தனமான செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.

உண்மையில் ஆர்ப்பாட்டத்தின் ஊடாகத்தான் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேவையில்லை. நேரடியாக நீங்கள் பிரதேச செயலாளரிடம் கோரிக்கைகளை முன்வைத்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதுவும் முடியவில்லை என்றால் அரசாங்க அதிபர் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அதுவும் இயலாவிடின் என்னை நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள். அரசாங்கம் என்ற ரீதியில் நான் உரிய நடவடிக்கை எடுப்பேன்” எனத் தெரிவித்தார்.

in

மற்றுமொரு இந்திய கப்பல் நிவாரணப் பொருட்களுடன் நாட்டை வந்தடைந்தது

December 16, 2025

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நிவாரண பொதிகளுடன் மற்றுமொரு இந்திய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இந்தியாவால்

amb

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய தேரருக்கு பயணத்தடை

December 16, 2025

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிடிவிறாந்து

mina

அதி சொகுசு கப்பல் இலங்கையை வந்தடைந்தது!

December 16, 2025

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட அதி சொகுசு கப்பல் ஒன்று நேற்று திங்கட்கிழமை (15)

Police logo

கொலை வழக்கு: சந்தேகநபருடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸ் சார்ஜன்ட் இடைநீக்கம்

December 16, 2025

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவில்

government

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

December 16, 2025

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொது

இன்று முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு

December 16, 2025

பேரிடர் சூழ்நிலை மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (16) முதல் 5,000 ரூபாவிற்கான

photo-collage.png (18)

கம்போடியா-தாய்லாந்து யுத்தம் நிறுத்தக் கோரி களனி ரஜமஹா விகாரையில் சத்தியாக்கிரகம்!

December 16, 2025

கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் நிலவும் யுத்தத்தை உடனடியாக நிறுத்தக் கோரி, ஓமல்பே சோபித தேரர் தலைமையில் 250க்கும் மேற்பட்ட பிக்குகள்

v

தொல்பொருள் திணைக்கள பதாகை அகற்றல் வழக்கு ஒத்திவைப்பு

December 16, 2025

வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட குழுவினரால் தொல்பொருள் திணைக்கள பதாதை அகற்றப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் மாசி மாதம்

sil

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்

December 16, 2025

1982ஆம் ஆண்டு நாட்டின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியவரும், பின்னர் இலங்கை கிரிக்கெட்டின் தலைவராகவும் பணியாற்றிய இலங்கையின் முன்னாள் லெக்

wind

கிழக்கில் அலை வடிவிலான காற்றுப் பெயர்ச்சி…

December 16, 2025

இன்றிலிருந்து நாட்டில் மழை ஓரளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கில் ஏற்படும் அலை வடிவிலான காற்றுப் பெயர்ச்சியின்

ba

மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்து; இருவர் காயம்

December 16, 2025

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக வவுனியா

ce

பதிவு சான்றிதழ்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

December 16, 2025

அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு மற்றும்