புதுக்குடியிருப்பு தபாலகத்திற்கு நிரந்தர கட்டடம் வேண்டுமென கோரிக்கை

தபாலகத்திற்குரிய நிரந்தர கட்டடத்தை அமைத்து அரசாங்கம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காது விடின் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்படும் என புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் குமாரவேலு அகிலன் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு தபால் நிலையத்திற்கு சொந்தமான அரச காணியிருந்தும் 13 வருடங்கள் கடந்தும் இதுவரை எதுவித கட்டுமான பணிகளும் மேற்கொள்ளவில்லை.

இருப்பினும் நேற்றையதினம் (06.12.2025) காலை தபால் ஊழியர்கள் குறித்த காணியினை துப்பரவு செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து, குறித்த பணியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதேசசபை உறுப்பினர், “புதுக்குடியிருப்பு பிரதேச செயலக வீதியில் அஞ்சல் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட காணி யுத்தத்திற்கு பின்னர் 13 வருடங்களாக துப்பரவு செய்யப்படாமல் எவ்வித கட்டுமான பணிகளும் இடம்பெறாமல் இருக்கிறது.

அதனால் காணி பற்றையாக காணப்படுவதோடு இக்காணிக்கு அருகாமை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வாய்க்கால் சீராக புனரமைக்கப்படாமல் இருக்கின்றது.

என மக்கள் பிரதேசசபைக்கு முறைப்பாடு வழங்கி இருந்தார்கள் அதற்கமைய தபாலக ஊழியர்கள் அஞ்சல் திணைக்களத்திற்குரிய காணியினை இன்றையதினம் துப்பரவு செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு தபாலகமானது 9 இடங்களில் இடமாறியிருக்கின்றது.

புதுக்குடியிருப்பு தபாலகம் உப தபாலகமாக இருந்து 2006 ஆம் ஆண்டு தபாலகமாக மாற்றம் பெற்றிருந்தது. இதன் கீழ் ஆனந்தபுரம், உடையார்கட்டு, விசுவமடு உப தபாலகங்கள் இயங்கி வருகின்றது. ஆனால் புதுக்குடியிருப்பு தபாலகம் வாடகை கட்டடத்திலேயே தற்போதும் இயங்கி வருகின்றது.

இதனால் தபாலகம் அடிக்கடி இடம்மாற வேண்டி இருக்கும் .இவ்வாறு இடம் மாறுவதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். இது தொடர்பாக ஜனாதிபதிக்கு இவ்வருடம் நான் கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கின்றேன்.

அதற்கு அடுத்த வருடத்திற்குள் கட்டிடம் அமைத்து தருவதாக பதில் வழங்கப்பட்டுள்ளது. நிரந்தர கட்டடம் ஒன்று அமைத்து கொடுப்பதன் ஊடாக மக்களுக்கும் , வேலை செய்யும் பணியாளர்களுக்கும் இடையூறு இருக்காது.

அடுத்த வருடம் தபாலகத்திற்குரிய நிரந்தர கட்டடங்களை அமைத்து அரசாங்கம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காது விட்டால் மக்களோடு இணைந்து வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்படும்” என தெரிவித்திருந்தார்.

au

“பாதுகாப்பு மையங்களில்” உள்ள இலங்கை மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் உதவி

December 7, 2025

வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்டு தற்போது “பாதுகாப்பு மையங்களில்” உள்ள இலங்கை மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் “செயல்படுத்தப்பட்ட துணை ஊட்டச்சத்து உணவாக”

bst

சூறாவளி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இறந்த கால்நடை விபரம்!

December 7, 2025

அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் ​ சூறாவளி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 4,000 கோழிகளும் 400 மாடுகள் 400 ஆடுகள்

cir

நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் கப்பலில் வந்த கள்ள சிகரெட்டுகள்

December 7, 2025

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு

photo-collage.png (5)

மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு; அமெரிக்க விமானப்படையின் C-130 விமானங்கள் இலங்கையை வந்தடைந்தன

December 7, 2025

அமெரிக்க விமானப்படையின் சி-130 ரக விமானங்கள் ‘தித்வா’ சூறாவளி நிவாரணப் பணிகளுக்காக இஇலங்கையை வந்தடைந்தன. ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களில்

crim

67 வயதான கணவரை உலக்கையால் தாக்கி; கொன்ற மனைவி

December 7, 2025

பெண் ஒருவர் தனது 67 வயதான கணவரை தலையில் உலக்கையால் அடித்து கொலை செய்ததாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர்

ja hind

யாழ். இந்து கல்லூரியில் தூக்கப்பட்ட சிவலிங்கத்தை அதே நிலையில் பேண வேண்டும் – நீதிமன்றம்

December 7, 2025

யாழ். இந்து கல்லூரியில் தூக்கப்பட்ட சிவலிங்கத்தை அதே நிலையில் பேண வேண்டும் – நீதிமன்றம் யாழ். இந்து கல்லூரியில் தூக்கப்பட்ட

1751730278-rice-hjg-L

அரிசியை வாங்கும் போது அவதானமாக இருங்கள்

December 7, 2025

வெள்ளத்தால் சேதமடைந்த அரிசி, மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதாக இருந்த நிலையில் அவை சட்டவிரோதமாக பதப்படுத்தப்பட்டு சந்தைக்கு விடப்பட்ட ஒரு மோசடியை

sama

மக்கள் ஏற்படுத்தி கொண்ட நல்ல அரசாங்கம் இது – சாமர சம்பத்

December 7, 2025

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு பின்னர் மக்கள் ஏற்படுத்தி கொண்ட நல்ல அரசாங்கம் இது என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்

tu

சுற்றுலாப் பயணிகளின் மனிதாபிமான உதவிகள்…

December 7, 2025

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரின் பின்னர் வழமை நிலைக்கு திரும்பும் வகையில் மக்கள் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் பெரும் சேதங்களுக்கு உள்ளான

Education

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில்…

December 7, 2025

பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி நாளை (08) கல்வி அமைச்சில் நடைபெறும் கூட்டத்தில்

juvan

இலங்கை மக்கள் குறித்து கனேடிய தமிழ் எம்பி முன்வைத்த கோரிக்கை!

December 7, 2025

இலங்கைக்கு வலுவான ஆதரவை கனடா வழங்க வேண்டும் என்று தமிழ் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன் அழைப்பு விடுத்தார்.

ditva_4

சுனாமியை விடவும் 10 மடங்கு பொருளாதார அழிவை புயல் ஏற்படுத்திவிட்டது?

December 7, 2025

தித்வா புயல் காரணமாக இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு சுனாமியினால் ஏற்பட்ட பாதிப்பை விடவும் பத்து மடங்கு அதிகம் என