புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் சவாலான பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு விசேட ஆதரவு வழங்கப்படும் என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அரசாங்கம், அதிகாரிகள் மற்றும் மக்கள் இணைந்து செயல்பட்டால் தீர்க்க முடியாது என்ற பிரச்சினை எதுவும் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்குடா மற்றும் ஏறாவூர் வலயக் கல்வி அலுவலகங்களுக்குச் சென்றபோது, கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களைச் சந்தித்து 2026 சீர்திருத்தங்களுக்கான தயாரிப்புகள் குறித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
“பாடசாலைப் பெறுபேறுகளைப் பொறுத்தவரை கூட, மட்டக்களப்பு ஒரு கடினமான பகுதி. அதனால்தான் இங்கு கூடுதல் ஆதரவை வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு குழந்தையும் தரமான கல்வியைப் பெற பாடசாலைகள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வி நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். “நாட்டை வளர்ப்பதற்கு கல்வி முக்கியமானது. ஒன்றாக வேலை செய்வதன் மூலம், எந்தவொரு சவால்களையும் நாம் சமாளித்து, அனைத்து குழந்தைகளுக்கும் நல்ல எதிர்காலத்தை வழங்க முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, பிராந்திய கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.