இலங்கையில் நபரினால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நியூசிலாந்து பெண், இலங்கை தொடர்பான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சைச் சேர்ந்த மோலி என்ற பெண்ணே இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அனுபவங்களைப் மோலி பகிர்ந்துள்ளார்.
இலங்கையில் ஒரு மாதம் பயணம் செய்த போது பாதுகாப்பாக உணர்ந்ததாகவும், இந்த அசம்பாவிதம் மட்டுமே தன்னை பாதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நபரின் தவறான செயற்பாட்டை வைத்து இலங்கை தொடர்பான தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்த வேண்டும் என வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெண்கள் பயமின்றி, தங்கள் இருப்பை நியாயப்படுத்த வேண்டிய அவசியமின்றி எங்கும் பயணிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தனது ஆதரவாளர்கள் மற்றும் இலங்கை சுற்றுலா பொலிஸாரின் உடனடி நடவடிக்கைக்கு அவர், நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த உலகம் நல்ல மனிதர்களால் நிறைந்துள்ளது என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றம் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தனது முச்சக்கர வண்டியை பின்தொடர்ந்து வந்து ஆபாசமாக செயற்பட்ட நபரால் தான் மனதளவில் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.