பாதிக்கப்பட்ட மலையக மக்களின் நல வாழ்வு குறித்து கனடிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை

இலங்கையின் மலையகப் பகுதிகளில் ‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாகப் பெருமளவிலான உயிரிழப்புகளும், சொத்து இழப்புகளும் ஏற்பட்டுள்ளமை குறித்து கனடிய தமிழர் பேரவை தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, நீண்டகாலமாகப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள தோட்டத் தொழிலாளர் சமூகங்கள் தங்களின் இருப்பிடங்களை இழந்து இடம்பெயர்ந்துள்ள நிலையில், அவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இயற்கை அனர்த்தங்கள் நிகழும் போதெல்லாம் தற்காலிகத் தீர்வுகளை வழங்குவதற்குப் பதிலாக, மீண்டும் மீண்டும் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு நிரந்தரமான மற்றும் பாதுகாப்பான இடமாற்றத் திட்டங்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என பேரவை வலியுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு முறையும் அனர்த்தம் நிகழ்ந்த பிறகு மக்களை மீண்டும் அதே ஆபத்தான பகுதிகளுக்கே திருப்பி அனுப்புவது அவர்களின் உயிருக்குத் தொடர்ச்சியான அச்சுறுத்தலையே ஏற்படுத்தும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களை அதே மாவட்டங்களுக்குள் பாதுகாப்பான நிலங்களில் மீள்குடியேற்ற முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இந்த மீள்குடியேற்றமானது வெறும் வீட்டு வசதியுடன் நின்றுவிடாமல், அவர்களின் வாழ்வாதாரம், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான திட்டமாக அமைய வேண்டும் என்பதை பேரவை வலியுறுத்தியுள்ளது.

மலையகப் பகுதிகளில் பாதுகாப்பான நிலங்கள் கிடைக்காத பட்சத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடியேற விரும்பும் குடும்பங்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் அங்கு நிலங்களை வழங்கும் திட்டத்தைக் கனடிய தமிழர் பேரவை ஆதரித்துள்ளது.

தமிழ் மொழிச் சூழல் மற்றும் பண்பாட்டுத் தொடர்ச்சி காரணமாக, இக்குடும்பங்களின் கௌரவமான வாழ்வு அங்கு உறுதி செய்யப்படும் என அந்த அமைப்பு நம்புகிறது.

இறுதியாக, எந்தவொரு இடமாற்றமும் கட்டாயப்படுத்தப்படாமல் முழுமையாக மக்களின் சம்மதத்துடனும், தகவலறிந்த விருப்பத்தின் அடிப்படையிலும் மட்டுமே நடைபெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையகத் தமிழ்ச் சமூகங்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த இலங்கை மற்றும் புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் கனடிய தமிழர் பேரவை தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்

WhatsApp Image 2026-03-05 at 12.42.39

கனடாவின் பிராம்டன் நகரமும் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றது!

March 5, 2026

பிராம்டன் நகரம் யுனைடெட் வே கிரேட்டர் டொரான்டோ (United Way Greater Toronto) அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதில்

arrest

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

March 5, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று

dea

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

March 5, 2026

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்

go

தங்க விலை மீண்டும் உச்சத்தில்!

March 5, 2026

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின்

per

இலங்கையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

March 5, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ele

இன்று நேபாளத்தில் பொதுத்தேர்தல்!

March 5, 2026

நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த

Poli

சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: சுற்றிவளைப்புகள் தீவிரம்

March 5, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நபர்களை இலக்கு வைத்து

Sri lanka

ஐசிசியுடன் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பேச்சு!

March 5, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றின் கீழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் கீழ் கொண்டு வருவது குறித்து