பாதிக்கப்பட்ட மக்களுக்கு விவேகா பயிற்சி நிலையத்தின் வெள்ள நிவாரண பணி

நாட்டில் அசாதாரண காலநிலையால் ஏற்பட்ட வெள்ள நீர் மற்றும் மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குவதற்கு விவேகா பயிற்சி நிலையம் வெள்ள நிவாரண பணிகளை முன்னெடுத்துள்ளது.

அதன் முதல் கட்டமாக நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட மலையக பிரதேசங்களுக்கு விநியோகிப்பதற்கு பொதி செய்யும் வேலைகள் கடந்து ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது.

அவ்வேளை விவேகா பயிற்சி நிறுவனத்தின் நிறுவனர் K. T. குருசாமி அவர்கள் கருத்துரைக்கும் போது அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலியையும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தில் விவேகா பயிற்சி நிலையம் பங்கு கொள்வதாகவும் இந் நாட்டில் இதுவரை ஏற்படாத பாரிய அனர்தம் ஏற்பட்டுள்ளதெனவும் இந்த அனர்த்தத்தில் இருந்து மக்களை மீட்டெடு க்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக விவேகா பயிற்சி நிலையம் சார்பில் வர்த்தகர்கள் நண்பர்கள் நலன் விரும்பிகள் மற்றும் சமூக ஆர்வகளரிடம் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டுகோள் விடுத்தோம் எனவும் எமது வேண்டுகோளுக்கிணங்க அதிகளவான நிவாரண பொருட்கள் (உலர் உணவு பொருட்கள், படுக்கை விரிப்புக்கள், பாய்கள், குழந்தைகள் பெண்களுக்கான நாப்கின் வகைகள், துவாய்க்கள், )கிடைத்ததாகவும் நிவாரண பொருட்களை அளித்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

இந்த நிவாரண பொருட்கள் இன்னும் 2, 3 ,தினங்களுக்குள் மலையக பிரதேசங்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் மீண்டெளுந்து தங்களது இயல்பு வாழ்கைக்கு திரும்ப வேண்டும் என இறைவனை பிராத்திப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து விவேகா பயிற்சி நிலையத்தின் தலைவர் த பழ புஷ்பநாதன் கருத்து தெரிவிக்கையில், அடை மழை ஆரம்பித்து கொழும்பு நகரில் சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த வேளையில் தெமடகொடை, வெல்லம்பிடிய,மட்டக்குளிய பிரதேசங்களில் இருந்து உணவு பொதிகள் அவசரமாக தேவைபடுவதாக தனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும் உடனடியாக தனது சொந்த நிதியில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உணவு பொதிகளை வழங்கியதாகவும் தொடர்ந்து யட்டியாந்தோட்டை கராகொட பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் கடந்த 04ந் திகதி பௌர்ணமி தினமன்று எமது குழுவினருடன் சென்று வழங்கியதாகாவும் நிவாரண பொருட்ளை தன்னுடைய வேண்டுகோளுக்கிணங்க கையளித்த அணைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

அன்றைய பொதியிடும் நிகழ்வில் விவேகா பயிற்சி நிலையத்தின் செயலாளர் துரை. ராஜரட்ணம் பொருளாளர் s. u. சத்தியமூர்த்தி சமுக ஆர்வலர்கள் செல்வரட்ணம், வேல்முருகன் , அசோகன் ஆகியோரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

sou

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தென் கொரியாவிலுள்ள இலங்கையர்கள் நன்கொடை

December 10, 2025

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபா பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக

kos

71 குடும்பங்கள் வெளியேற்றம்

December 10, 2025

மஸ்கெலியா, மறே தேயிலை தோட்டத்தின் கெடஸ் பிரிவில் வசிக்கும் 71 குடும்பங்களைச் சேர்ந்த 311 உறுப்பினர்கள் அப்பகுதியிலிருந்து திங்கட்கிழமை (08)

jail

பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து திருடிய 12 பேர் கைது

December 10, 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து சொத்துக்களை சூறையாடியதாகக் கூறப்படும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்

ila

இளநீர் வெட்டும் கத்தியால் குத்தி, இளைஞன் கொலை

December 10, 2025

இளநீர் வெட்டும் கத்தியால் இளைஞர் ஒருவரின் மார்பிலும் வயிற்றிலும் 5 முறை குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கணினி பொறியாளர்

fr

ஜனாதிபதியின் செயலாளருடன் பிரான்ஸ் தூதுவர் சந்திப்பு

December 10, 2025

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லேம்பெர்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

wo

பொதுமக்கள் மோசடிச் செய்திகளால் ஏமாற வேண்டாம்

December 10, 2025

பேரிடருக்குப் பிந்தைய நிவாரண செயற்பாடுகளுக்குத் தேவையான தகவல்களைச் சேகரிக்கும் பணியானது, அமைச்சுடன் இணைந்த கள அலுவலர்கள் மற்றும் கிராம அலுவலர்களின்

ve

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்?

December 10, 2025

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில்

gg

27 வயது இளைஞர் விபத்தில் பலி

December 10, 2025

திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தானது நேற்று

nad

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் அரச ஆவணங்களும் சேதம்!

December 10, 2025

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட அரச ஆவணங்கள் சேதமடைந்துள்ளதாக தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தின் (Department of

mo

இலங்கை மோட்டார்ஸ் போர்ட்டில் விரைவான மாற்றம்

December 10, 2025

இலங்கையின் முன்னணி கார்ட்டிங் குழுவான மோரா ரேசிங், நுழைவு நிலை கார்ட்டிங் முதல் சர்வதேச ஃபார்முலா பந்தயம் வரை மோட்டார்

log

சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கை மீளவும் கட்டியெழுப்பப்பட வேண்டும்! – கனேடிய நாடாளுமன்றில் லோகன் கணபதி

December 10, 2025

கனேடிய நாடாளுமன்றில் Progressive Conservative Party இன் உறுப்பினர் லோகன் கணபதி டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கை தொடர்பான தனது

thann

முல்லைத்தீவு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 10, 2025

தண்ணிமுறிப்பு குளத்தின் நீர் மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதனால், தற்போதைய மழை நிலையை கருத்திற் கொண்டு வான் கதவுகளை திறக்க