பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்; உலக வங்கிப் பிரதிநிதிகளைச் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணk;; உலக வங்கிப் பிரதிநிதிகளைச் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர்

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உலக வங்கிப் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.

டித்வா சூறாவளி புயல் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட கடுமையான பேரிடர் நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் உலக வங்கியின் இலங்கை பிரதிநிதிகள் குழுவுடனான விசேட சந்திப்பொன்று இன்று (02) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் வதிவிடப் பிரதிநிதி கிவோர்க் சார்கஸ்ஜான் (Gevorg Sargsyan) மற்றும் உலக வங்கியின் சிரேஷ்ட செயற்பாட்டு அதிகாரி திரு. அசேல திசாநாயக்க ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

பேரனர்த்தம் மற்றும் அதன் பிற்பாடு ஏற்பட்டுள்ள அதன் தற்போதைய தாக்கம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உலக வங்கிப் பிரதிநிதிகளுக்கு இங்கு விளக்களித்ததோடு, இதுவரை மனித உயிர்கள், சொத்துக்கள் மற்றும் பெருமளவிலான உட்கட்டமைப்பு வசதிகள் அழிந்து, சேதமடைந்துபோயுள்ள விதம் தொடர்பிலும் எடுத்துக்காட்டினார்.

இதன் பிரகாரம், இந்த உட்கட்டமைப்பு வசதிகளை புனர்நிர்மாணம் செய்து, மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும், அழிந்துபோய்யுள்ள, சேதமடைந்துபோயுள்ள சொத்துக்கள் மற்றும் தொழில்முயற்சிகளை மீண்டும் கட்டியெழுப்பி, மக்களை மீண்டும் தூக்கு விட்டு பக்கபலத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும் தேவையான உதவி ஒத்துழைப்புகளை இலங்கைக்குப் பெற்றுத் தருமாறு உலக வங்கி பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

அண்மைய காலத்தில் ஏற்பட்ட பொருளாதார வங்குரோத்து நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், நுண், சிறிய மற்றும் நடுத்தர முனைவோருக்கு, தொழில்முயற்சியாண்மைகளுக்கு இந்த பேரிடர் சூழ்நிலை மீண்டும் ஒருமுறை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமையினால், இவர்களையும் இவர்களினது தொழில் முயற்சியாண்மைகளையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான உதவுகளை, ஒத்துழைப்புகளை பெற்றுத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் கேட்டுக் கொண்டார்.

By C.G.Prashanthan

fr

பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வுக்குள் புகுந்த காரால் 10 பேர் பலி

December 6, 2025

பாரிஸ்: பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கூட்டத்திற்குள் அதிவேகமாக கார் புகுந்ததில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

dol

‘FIFA சமாதான விருது’டொனால்ட் டிரம்பிற்கு…

December 6, 2025

டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான

mod

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது!

December 6, 2025

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பின்பற்றி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

vija

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது

December 6, 2025

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச

ca

வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பெய்த கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் கந்தப்பளை பிரதேசத்தில் உள்ள

v

உயிரிழந்த விலங்குகளை கையாள்வது குறித்த முக்கிய வழிகாட்டுதல்கள்

December 6, 2025

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, , இறந்த விலங்குகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்த

central-bank

மத்திய வங்கி விசேட அறிவிப்பு

December 6, 2025

அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு பேரனர்த்தங்களின் மோசமான விளைவுகளைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வினைத்திறன்மிக்க நிவாரணத்தை வழங்குவதற்காக, இலங்கை மத்திய

Dead

காணிப் பிரச்சினை; ஒருவர் பலி

December 6, 2025

காணிப் பிரச்சினை காரணமாகத் தாக்குதலில் ஒருவர் பலி மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனபலை பிரதேசத்தில், காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக

ditva

வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்த கழிவுகள் சுற்றாடல் அமைச்சு வெளியிட்ட தகவல்

December 6, 2025

சமீபத்திய வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளது. இருந்த போதிலும், தற்போது வரையில் பிராந்திய

ran

மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு

December 6, 2025

ரன்தெம்பே – மஹியங்கனை மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு டித்வா புயலின் தாக்கம் காரணமாக செயலிழந்த ரன்தெம்பே

siva

சிவனொளிபாத மலை யாத்திரை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 6, 2025

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

sanakkiyan

நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் பொறிமுறை வேண்டும் – சாணக்கியன்

December 6, 2025

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க