பாதாள உலகக் குழுக்களுடன் காணப்படும் முரண்பாடுகளே எனது உயிர் அச்சுறுத்தலுக்கான காரணம்!

பாதாள உலகக் குழுக்களுடன் காணப்படும் முரண்பாடுகளே எனது உயிர் அச்சுறுத்தலுக்கான காரணம் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளமை அடிப்படையற்றதாகும். அவ்வாறு கூறி எனது நற்பெயருக்கு அவதூறு ஏற்படுத்தியுள்ள பொலிஸ் மா அதிபருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எனக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுகிறது என்பதை ஆதரத்துடன் சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்றத்தில் நிரூபித்திருக்கின்றேன். ஆனால் பொலிஸ்மா அதிபர் எனக்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பிருப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

உயிர் அச்சுறுத்தல் காணப்படும் நபர்களின் பெயர் பட்டியலில் 24ஆவதாக என்னுடைய பெயர் காணப்படுகிறது. ஆனால் தொடர்புடைய குற்றச் செயல்கள் என பொலிஸ் அறிக்கையின் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. மத்துகம ஷான் என்ற நபரால் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகக் கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எனக்கும் அந்த நபருக்கும் எவ்வித மோதலும் கிடையாது.

அவருடன் முரண்பாடுகள் ஏற்படுமளவுக்கு எமக்கிடையில் எந்தவொரு கொடுக்கல் வாங்கலும் கிடையாது. முச்சக்கரவண்டியொன்றில் சென்ற குழுவொன்று எனது குடும்பத்தாரிடம் என்னைப்பற்றி விசாரித்திருக்கின்றனர். இது தொடர்பில் குறித்த முச்சரவண்டியின் இலக்கத்தோடு நான் மத்துகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்திருக்கின்றேன்.

ஆனால் அவ்வாறு விசாரித்தவர்கள் பொலிஸார் என பின்னரே தெரிவிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரொருவருடைய இல்லத்துக்கு எதற்காக பொலிஸார் சிவில் உடையில் அனுப்பி வைக்கப்பட்டனர்? இது தொடர்பில் அவர்கள் ஏன் எனக்கு முன்னரே அறிவிக்கவில்லை?

உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக பொலிஸ்மா அதிபரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், எனக்கு தற்காலிகமாகவே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எந்த சந்தர்ப்பத்தில் எனக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டாலும், அதற்காக நான் பொலிஸாரிடம் கெஞ்சப் போவதில்லை.

பொலிஸ்மா அதிபரால் எனது நன்பெயருக்கு அவதூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கெதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம். சபாநாயகரிடம் இது குறித்து தெரிவித்ததன் பின்னர், என் முன்னிலையில் சபாநாயகரால் பொலிஸ் மா அதிபரிடம் எனக்கான பாதுகாப்பை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் இது குறித்து உரையாற்றியிருந்தார். அவ்வாறிருக்கையில் எனக்கு தற்காலிக பாதுகாப்பை வழங்குவதற்கு எந்த அடிப்படையில் பொலிஸ்மா அதிபர் தீர்மானித்தார்? இதற்கு நீதிமன்றத்தில் பொலிஸ்மா அதிபர் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது