இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனம் மைக்கேல் கோர்ஸ் 2.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை வழங்கியுள்ளது.
நிறுவனத்தின் இந்த செயலை ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) வரவேற்றுள்ளது.
நீண்டகாலமாக செயற்பட்டு வரும் “பசிப்பிணி நீங்குதலை காண்போம்” பிரச்சாரத்தின் (Watch Hunger Stop campaign) மூலம் வழங்கப்படும் இந்த உதவியானது, உலக உணவுத் திட்டத்தின் உலக உணவு திட்டத்தின் பாடசாலை முதல் வீட்டுத்தோட்டம் முதல் வகுப்பறை வரை (HGSF) முயற்சிக்கு பங்களிக்கும்.
இந்த நிதி, பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை எட்டு மாவட்டங்களிலிருந்து பத்து மாவட்டங்களாக விரிவுபடுத்த உதவும், இது அடுத்த மூன்று ஆண்டுகளில் 250,000 மாணவர்கள் நாளாந்தம் போசாக்கான உணவைப் பெறுவதை உறுதி செய்யும் என உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
இந்த நிதி 15,000 உள்ளூர் விவசாயிகள் மூலம் உள்ளூர் விவசாய உற்பத்தியை வலுப்பத்தி அடை பாடசாலை உணவு வழங்குனர்கள் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான வழங்குதை நோக்கமாக கொண்டது.
2013 ஆம் ஆண்டு முதல் “பசிப்பிணி நீங்குதலை காண்போம்” பிரச்சாரம் செயற்பட்டு வருகிறது. 2023 ஆம் ஆண்டில் இந்த திட்டம் உலக உணவுத் திட்டத்துடன் இணைந்தது.
2021 ஆம் ஆண்டில், அரசாங்கம் உலக உணவுத் திட்டம் தலைமையிலான உலகளாவிய பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் கூட்டணியில் இணைந்தது.
பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியது. பாடசாலை மாணவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடுகளை போசாக்கான உணவுகள் மூலம் நிவர்த்தி செய்வதை உறுதி செய்வதற்கு உலக உணவுத் திட்டம் தொழில்நுட்ப மற்றும் திறன் மேம்பாட்டு உதவிகளை வழங்குகிறது.