அனுராதபுரம் – தலாவ பகுதியில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அறுவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 40பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலாவ பகுதியிலுள்ள ஜெயகங்கா வீதியில் இன்று (10) பகல் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தம்புத்தேகம மற்றும் தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.